29.1.09

காதிர் முஹைதீன் மேல் நிலைப் பள்ளி அதிராம்பட்டினம்

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - அதிராம்பட்டினம் முன்னாள் மாணவர்கள் சங்கம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் நம்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரா? உடன் நமது முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் உறுப்பினராகுங்கள். நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் பள்ளியான காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்புகொண்டு உறுப்பினராகுங்கள்.
நம்பள்ளி சென்ற ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 85% சதவீதம் தேர்ச்சியும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92% சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எல்லா திறனும் உள்ள நமது மாணவர்களை சிறந்த சாதனையாளராக உருவாக்க உங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதால் முழுக்க‌ முழுக்க பள்ளியின் நலன் கருதியே இந்த முன்னாள் மாணவர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. உடன் 04373-242229 என்ற நம் பள்ளியின் தொலைபேசியிலோ அல்லது kmboysoldstudentassociation@gmail.com
என்ற முகவரிக்கு மெயில் செய்தோ அல்லது உங்களின் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நினைவுகளைத் தூண்டிய உங்கள் ஆசிரியர்களைத் தொடர் கொண்டோ இச்சங்கத்தில் இணையுங்கள்.
உங்களுக்கென்று விரைவில் ஒரு விழா தொடங்க இருக்கிறது. பழமையின் நினைவுகளும் இளமையின் கனவுகளும் சுமந்துள்ள நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
திரும‌தி பி.ரோச‌ம்மாள்த‌லைவ‌ர்த‌லைமையாசிரிய‌ர்(செல் : 9442267365)
ஜ‌னாப் எம்.ஹாஜி முக‌மது துணைத் த‌லைவ‌ர்
ஜனாப் ஏ.மஹ்பூப் அலி செயலாள‌ர் (செல் : 9442767380)
திரு.ஏ.சீனிவாச‌ன் பொருளாளர் (செல் : 9443863697)
டாக்ட‌ர் ஆ.அஜ்முதீன் துணை செயளாளர் (செல் : 9894666791)
உங்க‌ள் ந‌ண்ப‌ர்களின் இமெயில் முக‌வ‌ரியைத் தெரிவிக்க‌வும் அவ‌ர்க‌ளிட‌ம் இத்த‌க‌வ‌லையும் தெரிவிக்க‌வும் http://www.4shared.com/file/83035620/f532178f/OLD_STUDENTS_REGISTER_FORM.html

22.1.09

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லுரிகளின் பட்டியல்

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தம் பிள்ளைகளை மேற்கொண்டு என்ன படிக்க வைக்கலாம்? எங்கு படிக்க வைக்கலாம்? என்று சிந்திக்கத் தொடங்கி அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி விட்டனர். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளின் பற்றிய விபரங்கள் அறிய இங்கே கிளிக்கவும்
நன்றி லால்பேட்டை டாட் காம்

17.1.09

எட்டு வயதுச் சிறுவனின் கம்ப்யூட்டர் சாதனை



சாதாரண குடும்பங்களில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் ஒரு எட்டு வயது குழந்தையால் அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும்? நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை அப்படி என்ன சாதனை செய்து விடப்போகிறது என அலட்சியமாக நினைக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை அவர்களின் வளரும் வயதிலேயே அவர்களுக்குள் ஒளிந்துள்ள திறமையை இனம் கண்டு, அதில் போதிய பயிற்சியைக் கொடுத்தால், சாதிப்பதற்குச் சாதனை வயது என ஒன்று தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் எட்டு வயதான அமன் ரஹ்மான்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு. அதனை இனம் காண வேண்டியது பெற்றோர்களின் கடமை. தலைக்கு மேல் வளர்ந்தாலும் அவன்/அவள் எங்களுக்குச் சிறு குழந்தை தான் என பெற்றோர்கள் கூறுவது வழக்கம். இதனை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களை அந்தத் தரத்திலேயே வளர்க்கவும் செய்கின்றனர். இதற்கு படித்தவர்கள், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை.இதற்கு மாற்றாக ஆங்காங்கே சிலர் மட்டும், மிகச் சரியாக தங்களின் குழந்தைகளின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை அவர்களின் விருப்பத்துறையில் சரியாக திருப்பி விடுகின்றனர். இவ்வாறு தூண்டுதலைச் சரியான திசை நோக்கிக் கொடுக்கும் பொழுது, மிகக் குறுகிய காலத்திலேயே அக்குழந்தைகள் தமது துறையில் பிரகாசிக்கத் துவங்கி விடுகின்றனர். இதற்கான மற்றொரு உதாரணமே அமன் ரஹ்மான்.இவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் படங்களுக்கான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று சர்வதேச அளவில் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளார்.
வட இந்தியாவின் உத்தராகந்த் மாநிலத்தின் தெஹ்ராடனைச் சேர்ந்தவரான இந்த எட்டு வயது சுட்டி, இப்போது பெரியவர்களுக்கு அனிமேஷன் கற்றுக் கொடுப்பதில் பிஸியாக உள்ளார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனிமேஷன் படங்களை அமன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், கின்னஸ் புத்தகத்தில் "இளம் வயது சாதனையாளர்கள்" பட்டியலில் இடம் பெற முயற்சிகள் செய்து கொண்டுள்ளார்.
எட்டு வயதிலேயே தெஹ்ராடனில் உள்ள கலைக் கல்லூரியில் பயிற்சியாளராக உள்ள அமன் ரஹ்மான், மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை படிப்பறிவற்றவர்; ஸ்கூட்டர் மெக்கானிக்காக உள்ளார். நான்கு குழந்தைகளுள்ள அமன் ரஹ்மானின் தந்தைக்கு இவர் நான்காவது பிள்ளை.தெஹ்ராடன் பகுதியில் "லிட்டில் பில் கேட்ஸ்" என்று யாராவது கேட்டால் அவர்களின் கையைப் பிடித்து அமன் ரஹ்மான் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் அங்குள்ள மக்கள்.
மூன்று வயது முதலே கம்ப்யூட்டர் மீதான ஆர்வம் அமன் ரஹ்மானுக்கு அதிகரித்து விட்டதெனக் கூறுகிறார் இவரின் தாயாரான ஷப்னம் ரஹ்மான். பெரிய மகனுக்காக சிரமப்பட்டு வாங்கி வந்த பழைய கம்யூட்டர் ஒன்றில், அடிக்கடி அமர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வாராம் அமன் ரஹ்மான். இதைக் கண்ணுற்ற உறவினர்களும் நண்பர்களும் அமன் ரஹ்மானை கம்ப்யூட்டர் வல்லுனர்களிடம் சென்று பயிற்சி பெற பெற்றோர்களைத் தூண்டியுள்ளனர்.இதைத் தொடர்ந்து இண்டராக்ட்டிவ் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற கல்லூரி சென்று தன் மகனைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் அமன் ரஹ்மானின் தந்தை. அமனைப் பரிசோதித்து வியந்த கல்லூரி நிர்வாகம் அவரது கல்விக்காக ஸ்காலர்ஷிப்பை ஏற்பாடு செய்து கொடுத்தது.
கல்லூரியில் இணைந்த ஒரே மாதத்தில் அமன் ரஹ்மான் எழுதிய கம்யூட்டர் புரோக்ராம் ஒன்று அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. காரணம், கணினி வல்லுனர்களால் பதினைந்து மாதங்கள் கால அவகாசம் எடுத்து எழுதக் கூடிய நிரல் துண்டினை ஒரே மாதத்தில் உருவாக்கியிருந்தார்.
இவரது சாதனைகளைப் பாராட்டி மாநில அரசு இவருக்கு லேப்டாப் ஒன்றும், ஒரு இலட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் கொடுத்து ஊக்குவித்துள்ளது.அத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இளம் வயது சாதனையாளர்களுக்கான பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருக்கிறார் அமன் ரஹ்மான். இதில் தமக்குக் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்.
அமன் ரஹ்மானின் திறமையைக் கேள்விப்பட்ட உடனேயே, ஆஸ்திரேலிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்று அவரை ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறது. தமது குடும்பத்தினரோடு சேர்ந்து இதனை மறுத்துள்ள அமன் ரஹ்மான், தமது சேவை இந்தியாவிற்கு உதவிடும் வகையில் தாம் இந்தியாவிலேயே பணிபுரிய விரும்புவதாகக் கூறியுள்ளார்.
ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்த அமன் ரஹ்மான் போன்ற இளம் விஞ்ஞானிகளை அலட்சியப் படுத்தி ஒதுக்கிவிடாமல் இனம் கண்டு, தகுந்த பயிற்சியும் முறையான உதவிகளையும் செய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என்பதோடு வளரும் குழந்தைகள், அவர்கள் விரும்பும் துறை எது என்பதைச் சரியாக இனம்கண்டு அதன்பால் அவர்களைத் திருப்பி விடுவதற்குப் பெற்றோர்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சத்தியமார்க்கம்.காம் தளத்தின் ஆவல்.
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

9.1.09

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை மத்திய அரசு உத்தரவு
சென்னை, ஜன.9: தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:மேல்நிலை வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. மேல்நிலைப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளில் டிகிரி படிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.1000 என 10 மாதங்கள் தரப்படுகிறது. முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுகளில் மட்டும் மாதம் ரூ.2000 வழங்கப்படும்.விஞ்ஞானம், வணிகவியல் மற்றும் சமூகவியல் படித்தவர்களுக்கு 3:2:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசின் இட ஓதுக்கீடு முறையான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்ற சாதியினர் என்ற இட ஓதுக்கீட்டில் உள்ள சதவிகிதங்கள் பின்பற்றப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை
இணை இயக்குநர்(மேல்நிலை வகுப்பு),
பள்ளிக் கல்வித் துறையில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

7.1.09

சிங்க‌ப்பூரில் க‌ல்வி ம‌ற்றும் ச‌மூக‌ மேம்பாடு குறித்த‌ சொற்பொழிவு

சிங்க‌ப்பூர் இந்திய‌ முஸ்லிம் ச‌ங்க‌ங்க‌ள் ம‌ற்றும் ஜாமியா சிங்க‌ப்பூர் ஆகிய‌வை இணைந்து க‌ல்வி ம‌ற்றும் ச‌மூக‌ மேம்பாடு குறித்த‌ சொற்பொழிவு 18.01.2009 ( 21 முஹ‌ர்ர‌ம் 1430 ) ஞாயிற்றுக்கிழ‌மை பிற்ப‌க‌ல் 2.30 ம‌ணிக்கு சுல்தான் ம‌ஸ்ஜித் இணைப்பு அர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இத்த‌க‌வ‌லை இந்நிக‌ழ்வின் நெறியாள‌ர் ப‌ன்னூலாசிரிய‌ர் டாக்ட‌ர் சையது இப்ராஹிம் ( ஹிமானா சையது ) செய்தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார்.
ஜாமியா சிங்க‌ப்பூர் த‌லைவ‌ர் ஹாஜி அபுப‌க்க‌ர் மைதீன், பென்கூல‌ன் ம‌ஸ்ஜித் நிர்வாக‌க்குழு த‌லைவ‌ர் ஹாஜி எஸ்.எம்.அப்துல் ஜ‌லீல் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌ர்.
சுற்றுச்சூழ‌ல்,நீர்வ‌ள‌த்துறை ம‌ற்றும் முஸ்லிம் அலுவ‌ல்க‌ளுக்கான‌ பொறுப்பு அமைச்ச‌ர் மாண்புமிகு டாக்ட‌ர் யாகூப் இப்ராஹிம் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ இருக்கிறார்.
ம‌ஸ்ஜித் அப்துல் க‌பூர் இமாம் ம‌வ்ல‌வி எஸ்.ஏ. ர‌பீக் அஹ‌ம‌து பாஜில் பாக‌வி, பென்கூல‌ன் ம‌ஸ்ஜித் இமாம் ம‌வ்ல‌வி அப்துல் கையூம் பாக‌வி ஆகியோர் உரை நிக‌ழ்த்த‌ இருக்கின்ற‌ன‌ர்.
ஓ.எச். அப்துல் ம‌ஜீது இறைகீத‌ம் பாட‌ இருக்கிறார்.
மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌
எச்.எம். ச‌லீம் ( 97841814 ) ம‌ற்றும்
ஹாஜி ந‌சீர்க‌னி (96524721)
ஆகியோரை தொட‌ர்பு கொள்ள‌லாம்.
நன்றி: Imantimes@googlegroups.com

2.1.09

12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு பயிற்சி முகாம்

நெல்லை மாவட்ட TNTJ மாணவர் அணி நடத்தும்

பொது தேர்வு பயிற்சி முகாம்,

10'ஆம், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி முகாம்
நாள் : 11-01-09. ஞாயிற்று கிழைமை (இன்ஷா அல்லாஹ் )
நேரம் : 9 AM - 1 PM : 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
2 PM - 5 PM : 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
இடம் : மாநகராட்சி திருமண மண்டபம்,
மேலப்பாளையம் காவல் நிலையம் அருகில்,
மேலப்பாளையம், நெல்லை மாவட்டம்

குறிப்பு : கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு வினாத்தாள் புத்தகம்(Question Book ) இலவசமாக வழங்கப்படும்.
தொடர்பிற்கு : பைசல்- 9943935006
( நெல்லை மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்)


1.1.09

பொறியிற் கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை

+2 தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவந்த பின் மேற் கொண்டு தங்கள் பிள்ளைகளை உயர் கல்வி பயில்விக்க பெற்றோர்கள் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும். எதிர் காலத்தில் பொறியல் படிப்புக்கு அதிக வரவேற்பு இருப்பதை காண்கிறோம். எனவே, பொறியியற் கல்லூரிகளில் தம் குழந்தைகளை சேர்ப்பதற்காக பெரும் முயற்சி செய்து பல்வேறு தகவல்களை அரும்பாடுபட்டு தலூரட்டிய விபரங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அறந்தாங்கி சொக்கலிங்கம் என்னும் நண்பர்.

தகவல்களை திரட்டித் தந்த நண்பர் சொக்கலிங்கம் அவர்களுக்கு எமது நன்றி.

------------------------------------------------------------------
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச்சு முதல் வாரத்தில் தொடங்கும்

 தேர்வுகள் மார்ச் மாதம் 3 ஆம் வாரத்தில் நிறைவடையும்.

 விடைத்தாள் திருத்தும்பணி மார்ச் 4 ஆம் வாரத்தில் துவங்கும்.

 விடைத்தாள் திருத்தும்பணி ஏப்ரல் 3 ஆம் வாரத்தில் நிறைவடையும்.

 மே மாதம் 2 ஆம் வாரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 தேர்வுத்தாள் நகல் வேண்டுவோர் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் உடன் விண்ணப்பிக்கலாம் மறு ஆய்வு செய்து அறிவிப்பார்கள். மே மாதம் 2ஆம் வாரத்தில் ரிசல்ட் வெளியானவுடன் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும்.

 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்ப வேண்டும். +2 தேர்வு 6 இலட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்

 இந்த ஆண்டின் நிலவரப்படி சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அதிகரித்துவருவதால் 75 முதல் 80 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் கல்லுரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
------------------------------------------
அண்ணா பல்கலைக் கழகம்

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.பொறியியல் கல்லூரிகள் நான்கு வகைப்படும்.

 அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உரிய கல்லூரிகள்; மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள்.

 அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகள்.

 சுயநிதி பொறியியல் கல்லூரிகள்.

 தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் பொறியியல் கல்லூரிகள்.

ANNAMALAI UNIVERSITY CHIDAMBARAM
SHREE SHANMUGA DEEMED UNIVERSITY THANJAVUR
CHEETINAD ENGINEERING COLLEGE CHENNAI
S.R.M நிகர் நிலைப் பல்கலைக் கழகம் சென்னை
சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சென்னை
------------------------------------

அண்ணா யுனிவர்சிட்டிக்கு உரிய கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தையும் அரசே நிறைத்துக் கொள்ளும்.அதே போன்று அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் தங்களிடம் உள்ள மொத்த இடங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்

 சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவிகித இடங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும்

 சிறுபான்மையினர் நடத்தும் பொறியியல் கல்லூரிகள் 50 சத விகித இடங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றவைகள். அதனால் அரசாங்க ஒதுக்கீட்டிற்கான 65 சதவிகித இடங்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அரசாங்கம் தீர்மாணித்துள்ள கட்டண விகிதம்தான் அவர்கள் வாங்க வேண்டும். (லட்சக்கணக்கில் டொனேஷன் வாங்குவார்கள் என்பதுவேறு விஷயம்)

தமிழ்நாட்டில் உள்ள பொறியில் கல்லூரிகளை தரம் பிரிப்பது எப்படி? அரசாங்கத்திற்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும்அரசுநிதி உதவிபெறும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தின் நேரடி நிர்வாகத்தின்கீழ் இயங்குவதால் கல்வித்தரம் மிகவும் உயர்நிலையில் இருக்கும்.மேலும் அண்ணா பல்கலைக் கழகம் உலகில் உள்ள பல்வேறு முக்கிய பல்கலைக் கழகங்களுடன் கல்வி பரிமாற்ற ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளபடியால் வெளிநாடுகளில் இந்த பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இக்கல்லுரியில் சேர்வதற்கு தகுதி அதிக கட்ஆப் மார்க் எடுக்க வேண்டும்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் மேம்பட்ட தேர்ச்சி விகிதம் ஆகியவற்றைக் கொண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மூலம் தேசிய அளவிலும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு அளவிலும் தரச்சான்று வழங்கப்படுகிறது.

அவ்வாறு சான்றிதழ் பெற்ற கல்லூரிகளின் கல்வித்தரம் நன்றாக இருக்கும். இதில் சேருவதற்கு மார்க் கூடுதல் வேண்டும்.

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள்

சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகள் மூன்றாவது நிலையில் கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மாணவர்கள் எடுத்துள்ள கட்ஆப் மார்க் அடிப்படையில் Phase 1, phase 2 எனஇரு பிரிவாக பிரிக்கப்பட்டு இரண்டு தவணையில் கவுன்சலிங் நடைபெறும். இந்தக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 65 சத விகித இடங்கள் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்.இந்தக் கல்லூரிகளின் தரம் அடிப்படைவசதிகள் மாணவர்களின் முதல் நிலை தேர்ச்சி விகிதம் ஆகியவற்றைக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா யுனிவர்சிட்டி மூலம் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

அடுத்தது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்:

தன்னாட்சி உரிமை பெற்றவைகள் அவர்களிடம் உள்ள மொத்த இடங்களையும் அவர்களே நிரப்பிக் கொள்வார்கள். ஆனால் அரசாங்க விதிகளின்படி OC, BC,BC (MUSLIM) BC(CHRISTIAN),MBC,SC,ST. இவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டு விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதே போல் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்தை அனுசரித்து ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படவேண்டும். இப்பல்கலைக் கழகங்களின் தரம்; அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு சில ஸ்தாபனங்கள்
Thanjavur sri shanmuga engineering college.
Chidambaram annamalai university.
Chennai chettinad university. ஆகியவை பெயர் பெற்றவைகள்.

கல்லூரியில் அட்மிஷன் பெறுவது எப்படி என்பதை தெறிந்து கொள்வதற்கு முன்பாக சில விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

கட் ஆப் மார்க் என்றால் என்ன? அது எவ்வாறு தோந்தெடுக்கப்படுகிறது?

+2 தேர்வில் MATHS (கணக்கு) பாடத்திற்கு 200 மதிப்பெண்கள் PHYSICS(இயற்பியல்) பாடத்திற்கு மொத்தம் 200 மதிப்பெண்கள் CHEMISTRY(வேதியியல்) பாடத்திற்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். மேற்கண்டவற்றுள்,கணக்குப் பாடத்திற்கான மதிப்பெண் 200க்கு 50 சதிவிகிதம் 100 மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும்.PHYSICS, CHEMISTRY இரண்டிலும் 25 % மதிப்பெண்கள் அதாவது50+ 50 = 100 என்று எடுத்துக்கொண்டு மொத்தம் 200 என்னும் அடிப்படையில் கட் ஆப் மார்க் கணக்கிடப்படுகிறது.

கல்விக்கட்டணம் சம்மந்தமாக தெரிந்துகொள்ள வேண்டும். மூன்று விதமான இடஒதுக்கீடுகள் உண்டு.மதிப்பெண் தகுதி அடிப்படையில் கிடைக்கக்கூடியது இலவச இடஒதுக்கீடு எனப்படும்.

அண்ணா பல்கலைக் கழகம், அரசுக்கல்லூரிகள் அரசு உதவிபெறும்கல்லூரிகள் இவைகளுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக அரசுதீர்மானித்துள்ளது ரூ 8000 மட்டும்.

PAYMENT SEAT இதற்கு அரசு நிர்ணயம் செய்துள்ளது ரூ 32 500 இது தனியார் கல்லூரிகள் அரசுக்கு கொடுக்கக்கூடிய 65%ஒதுக்கீட்டு இடத்திற்கு பொருந்தும்.தனியார் கல்லூரிகளில் தரச்சான்று பெற்ற கல்லூரிகள் ஆண்டுக் கட்டணமாக ரூ 40 000 பெற்றுக் கொள்ள அரசுஅனுமதி வழங்கியுள்ளது.அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் (SS) Self Supporting Programme எனப்படும்; இணைப்புப் பாடத்திட்டத்திற்கு ரூ 40000 கடந்த ஆண்டு அரசால் தீர்மானிக்கப்பட்ட தொகையாகும்.

Managment Seat எனப்படுவது தனியார் கல்லூரி நிர்வாகத்திற்குசொந்தமான 35% இடங்களுக்கு உரியதாகும் இதற்கு அரசாங்கம் ஆண்டுக் கட்டணமாக பெற்றுக்கொள்ள அனுமதித்துள்ளது ரூ 64000 தனியார் கல்லூரிகளில் 1 லட்சம் முதல் 8 லட்சம்வரை டொனேஷன் வாங்குகிறார்கள்.மேலே கல்லூரி ஆண்டுக் கட்டணத்தைப்பற்றி தெரிந்து கொண்டோம். இவை தவிற வேறு என்னென்ன கட்டணங்கள் உண்டு என்பதையும்தெரிந்துகொள்ள வேண்டும்
கீழ்க்காணும் கட்டண விகிதங்கள் ஒரு ஆண்டுக்கு சுமார்

Collge Fees ....................................Rs 32 500
Caution deposit (Refundable).....Rs 5000
Admission fees..............................Rs 1000
Establisment charge .................. .Rs 3000
Room rent .....................................Rs 6000
Electricity ......................................Rs 1500
Mess Charge...................................Rs 15000
Book Materials.............................. Rs 16000
ஆக மொத்தம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய்
இவை போக வெளிச் செலவுகள் சுமார் 20 ஆயிரம் ரூபாய்
ஆக ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவாகும்.

செலவு விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டோம். அடுத்து என்ன செய்ய வேண்டும். நம்மை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும்.தமிழ் நாட்டின் தற்போதைய கல்வித்திட்டம் ஓரளவு நம்மைப் போன்ற நடுத்தர மக்களும் பயனடையும்படி அமைந்துள்ளது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கவுன்சலிங் என்றால் என்ன?

நாம் பூர்த்தி செய்து அனுப்பிய விண்ணப்பம் அண்ணா யுனிவர்சிட்டிக்கு கிடைக்கப்பெற்று சரி பார்க்கப்பட்டு முதல் கட்டமாக Overall Rank அறிவிப்பார்கள் அடுத்து உடனே ஓரிரு நாட்களில் Community Rank அறிவிப்பார்கள். அடுத்து Random Number அறிவிப்பார்கள்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு வரும்படி தேதி மற்றும் நமது கட் ஆப் மார்க் இவைகளை குறிப்பிட்டு அழைப்புக் கடிதம் வீட்டிற்கு வரும். குறிப்பிட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாக சென்னை செல்லவேண்டும். ஒரு மணி நேரம் முன்னதாக சென்று கலந்துகொள்ளவேண்டும். அங்கு நமது தகுதிக்கு ஏற்ப கல்லூரி ஒதுக்கித்தருவார்கள்.
---------------------------------

கவுன்சலிங் செல்வதற்கு முன்பாக தயார் செய்துகொள்ளவேண்டியவைகள்.
1) Residence (nativity) certificate
2) Birth ceftificate
3) Community certificate
4) Income certificate
5) Ration card xerox
6) Transfer certificate
7) Mark sheet
அப்ளிக்கேஷன் பூர்த்திசெய்வது எப்படி:?

500 ருபாய் கொடுத்து அப்ளிக்கேஷன் வாங்க வேண்டும் கவரின்மேல் ஒரு நம்பர் இருக்கும் அதுதான் நமது Registeration Number.
அப்ளிகேஷன் கவரினுள்
(1)application form
(2)code sheet
(3) envelope
(4) acknowledgement card
(5) information Guide
ஆகியவை இருக்கும். அடித்தல் திருத்தல் இல்லாமல் பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் கூரியர் மூலமாக அனுப்பக் கூடாது.
acknowledgement card கவரின் உள்ளே வைத்து அனுப்பவேண்டும்.அனைத்து சான்றிதழ்களுக்கும் Attestation செய்து வாங்கிய நகல்களை மட்டும் அனுப்ப வேண்டும்
Information guide book ல் சகல விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கூடுதல் விபரங்களுக்கு
w.w.w.annauniv.edu/tnea2009