9.2.10

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு.............

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் பெற என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி,

1. அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் பொறியியல் கல்லூரிகளுக்குள் அவர்கள் படித்து வரும் அதே பிரிவின் கீழ் இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும். மாற்றம் செய்து கொள்ள விரும்பும் கல்லூரிக்கு அரசு அங்கீகரித்துள்ள இடத்திற்கு அதிகமாகாத நிலையில் மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

2. இதேபோல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மற்ற சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்குள் அவர்கள் படித்து வரும் அதே பிரிவின் கீழ் இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும். மாற்றம் செய்து கொள்ள விரும்பும் கல்லூரிக்கு அரசு அங்கீகரித்துள்ள இடத்திற்கு அதிகமாகாத நிலையில் இரு கல்லூரி முதல்வர்களின் ஒப்புதலுடன் மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்காணும் இட மாற்றத்திற்கான அனுமதி ஒரே பல்கலைக் கழகத்தின் கீழ் இணைத்துக் கொண்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் பொருந்தும். பிற பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் படித்து வரும் கல்லூரியில் நடந்த பல்கலைக்கழகத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மே மற்றும் நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் அல்லது இந்த இயக்கத்திற்கான இணைய தளத்தில் மாற்றம் செய்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவத்தில் தற்போது பயின்று வரும் பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் மாற்றம் செய்து கொள்ள விரும்பும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஒப்புதலைப் பெற்று சென்னையிலுள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்தில் இருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பொழுது இட மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் தரம் உயர்த்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அதாவது, பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டவற்றில் பயின்று வரும் மாணவர்கள் இடம் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்புகள் இல்லை.

நன்றி-லெப்பைகுடிகாடு.காம்

2.2.10

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?-2 (வீடியோ)

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? -1 (வீடியோ)

14.1.10

TNTJ மாணவர் அணி நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்

TNTJ மாணவர் அணி நடத்தும்
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்
(இன்ஷா அல்லாஹ்)

 
1.  மேலப்பாளையம் (நெல்லை மாவட்டம்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : காலை 10 மணி

இடம் : மாநகராட்சி கல்யாண மண்டபம், மேலப்பாளையம், நெல்லை மாவட்டம்
சிறப்புரை :  M.அப்துல் பாசித்.B.Sc.B.L (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)                

தொடர்பிற்கு : 9787500719

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ நெல்லை மாவட்ட மாணவர் அணி.
 
 
2. கீழக்கரை
 
நாள் :  வெள்ளி கிழமை  (15/01/2010)

நேரம் : மாலை 4 மணி

இடம் : TNTJ மர்கஸ், இஸ்லாமியா மேல்நிலை பள்ளி பின்புறம், தெற்கு தெரு, கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்.

தொடர்பிற்கு :  9500948429

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட  மாணவர் அணி
  
3. அம்மாபட்டிணம் (புதுகோட்டை மாவட்டம்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : காலை 9 : 30 மணி

இடம் : அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி, அம்மா பட்டிணம், புதுகோட்டை மாவட்டம்

சிறப்புரை : சகோ. N.அல் அமீன் B.E (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)
                

தொடர்பிற்கு : 9043486280

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புதுகோட்டை மாவட்ட மாணவர் அணி.
 
4. T.R.பட்டிணம் (காரைகால்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : மாலை 4 மணி

இடம் :  TNTJ மர்கஸ், N0: 7, ஹாஜியார் தெரு, TR.பட்டிணம், காரைகால்

சிறப்புரை : சகோ.கலீல்.M.B.A. (மண்டல மாணவர் அணி செயலாளர்)
                
 தொடர்பிற்கு : 9976615655

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ காரைகால் மாவட்ட மாணவர் அணி.
 
5.  திருத்துறைபூண்டி (திருவாரூர் மாவட்டம்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : காலை 10 மணி

இடம் :  TNTJ மர்கஸ், பொன்னையன் செட்டி தெரு, திருத்துறைபூண்டி, திருவாரூர் மாவட்டம்

சிறப்புரை : சகோ.ஹாஜி.B.E. (மண்டல மாணவர் அணி துனை செயலாளர்)
                

தொடர்பிற்கு : 9715188464

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.
 
 
6. ஆர்.புது பட்டிணம் (புதுகோட்டை மாவட்டம்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : மாலை 4 மணி

இடம் :  No : 6/194, முஸ்லீம் தெரு, ஆர்.பட்டினம், புதுகோட்டை மாவட்டம்

சிறப்புரை : சகோ. N.அல் அமீன் B.E (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)
                
தொடர்பிற்கு : 9043486280

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புதுகோட்டை மாவட்ட  மாணவர் அணி.
 
 7. திருவாரூரில்   

நாள் :  சனி கிழமை  (16/01/2010)

நேரம் : காலை 10 மணி

இடம் :  மஸ்ஜித் தக்வா, செல்வம் தெரு, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சிறப்புரை : மருத்துவர்.சர்வத்கான்.M.B.B.S
                  சகோ.ஹாஜி.B.E. (மண்டல மாணவர் அணி துனை செயலாளர்)
                
 தொடர்பிற்கு : 9865962542

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.
   
 சிவகங்கை மாவட்ட மாணவர் அணி நடத்தும் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)
 
நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010) (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : காலை 10 மணி

இடம் :  TNTJ மர்கஸ், சிவகங்கை புது பேருந்து நிலையம் அருகில், பெட்ரோல் பஃங்க் பின்புறம், சிவகங்கை
    
தொடர்பிற்கு : 9003811959

 மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ சிவகங்கை மாவட்ட மாணவர் அணி.
 
 






12.1.10

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

நாமும் கலெக்டராவோம் (IAS) கமிஷ்னராவோம் (IPS)
- வெரும் 70 ரூபாய் செலவில் தயாராகுங்கள் பட்டதாரிகளே !!!








இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான நுழைவு தேர்வு (IAS, IPS, IFS etc…) விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முதல் நிலை தேர்விற்க்கான விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுவிலும் தேர்சி பெற்று நேர்முக தேர்வுவில் தேர்வு பெற்றால் 24 உயர் பதவியியில் ஒன்றை பெறலாம். இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசு பதவிக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெருவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும் (கலெக்டர்), காவல் துறை ஆணையராகவும் (கமிஷ்னர்) முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான், பெண்களுக்கு ரூ.20 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும், குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாதது (அல்லது மிக குறைவாக இருப்பது) மிக முக்கிய காரணங்களில் . சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் நாம் IPS, IAS -இல் தேர்வாகி காவல் துறை ஆனையாளராகவும், மாவட்ட கலெக்டராகவும் ஆனால் மட்டுமே நமது சமுதாயத்திற்க்கு பதுகாப்பு அளிக்க முடியும். சமுதாய முன்னேறத்திற்க்கும் பாதுகாப்பிற்க்கும் அரசியல் தீர்வல்ல, படித்து இது போன்ற பதிவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அரசியல் மாயை காட்டி உங்களின் உழைப்பில் பதவி சுகம், பணம் அடையதுடிப்பவர்களை தூக்கி எறியுங்கள், நேரத்தை வீணாக்காமல் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.
இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பாட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வருங்கள் என உங்களை மாணவர் அணி அன்புடன் அழைகின்றது.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்க்கு மற்றும் ஓர் காரணம் , இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் (ன்று தங்களை சொல்லிகொள்பவர்கள்). இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய பட்டதாரிகளின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC ( IAS,IPS,IFS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுறித்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


தங்கள் பிள்ளைகளை இலச்ச கணக்கில் பணத்தை கட்டி படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் 70 ரூபாயில் எழுதப்படும் இந்த தேர்வை எழுத தங்கள் பிள்ளைகளை தூண்டுவதில்லை. இதில் நாம் பெற்றோர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பொதுவாகவே நமது சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிவதில்லை, மேலும் வழிகாட்ட யாரும் முன் வருவதில்லை, அல்லது அவர்களின் வழிகாட்டல் மிக குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே உள்ளது (இப்போது உங்களுக்கு வழிகாட்ட நமது மாணவர் அணி தயாராக உள்ளது). இது வரை முஸ்லீம் இயக்கங்களை நடத்திய தலைவர்கள் இதில் அக்கரை காட்டாமல் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் அரசியலை பிடித்துக்கொண்டு முஸ்லீம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அரசியலைவிட கல்வி முன்னேற்றம் தான் ஒரு சமூகத்திற்க்கு பாதுகாப்பையும், சுகாதாரத்தையும், சுய சிந்தனையும் கொடுக்கும். அரசியல்வதிகள் ஐந்து வருததில் மாறிவிடுவார்கள் ஆனால் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) போன்றவர்கள் பல வருடங்கள் பணியாற்றி சமுதாயத்திற்க்கு பாதுகாப்பும் முன்னேற்றமும் வழங்க முடியும். எனவே தான் நமது மாணவர் அணி கல்வி முன்னேற்றத்தை கையில் எடுத்து இதுவரை யாரும் செய்திராத கல்வி வளர்ச்சி பணியை தமிழகத்தின் மூளை முடுக்கெள்ளாம் செய்து வருகின்றது.


IAS, IPS நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு UPSC தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.





ஆக்கம் :
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி








7.1.10

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாணவிக‌ள் க‌வ‌ன‌த்திற்கு

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாணவிக‌ள் க‌வ‌ன‌த்திற்கு

அல்ஹாஜ் டாக்ட‌ர் ஏ. ஜ‌மீர் பாஷா ‍ ஹாஜியா ஷ‌கீலா த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் டாக்ட‌ர் எம்.எஸ். அஷ்ர‌ஃப் ஹாஜியா ஜீன‌த் த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் ஹெச். க்யூ. ந‌ஜ்முதீன் ஹாஜியா சைய‌து பாத்திமா த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் ஏ. ப‌ஷீர் அஹ்ம‌த் ஹாஜியா அப்ரோஜா க‌னி த‌ம்ப‌திக‌ள்

வ‌ழ‌மை போல் இவ்வ‌ருட‌மும் எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் தேர்வில் அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ முஸ்லிம் மாண‌விக‌ளுக்கு ந‌ர்கிஸ் சார்பில் ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கி பாராட்ட‌ இருக்கிறார்க‌ள்.

அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து ம‌திப்பெண் சான்றித‌ழ்க‌ளை ஜுன் 30 க்குள் கைப்ப‌ட‌ எழுதிய‌ க‌டித‌ம், வீட்டு முக‌வ‌ரி, தொலைபேசி எண், 1 புகைப்ப‌ட‌ம், ரிப்ளை க‌வ‌ர் இணைத்து ந‌ர்கிஸ் முக‌வ‌ரிக்கு அனுப்பித் த‌ர‌ வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாண‌விக‌ள் என்று க‌வ‌ரில் குறிப்பிட‌வும்.

முக‌வ‌ரி :

எம். அனீஸ் ஃபாத்திமா
ஆசிரியை, ந‌ர்கிஸ்
54 ம‌ரிய‌ம் ந‌க‌ர்
ம‌ல்லிகைபுர‌ம்
திருச்சி 620 001
--------------------------------

இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் - துபாய்

24.12.09

ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்

"மேற்கு வங்காளம் முழுவதும் ஆங்கில மொழியில் பாடம் நடத்தும் புதிய மத்ரஸாக்களை உருவாக்க இருப்பதாக" மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. "இதன் மூலம் ஆயிரக் கணக்கான முஸ்லிம்/முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பயன் அடைவர்" என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்ரஸா (مدرسة) எனும் அரபுச் சொல்லுக்கு "கல்வி கற்றுக் கொள்ளும் இடம்" என்று பொருள். அரபு மொழியில் இது பாடசாலை/பள்ளிக்கூடம் என்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியினால் ஆதிக்கச் சக்திகள்  'ஜிஹாத்' எனும் சொல்லுக்கு, "அப்பாவிகளைக் கொல்லுதல்" போன்ற தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் களங்கம் ஏற்படுத்தியதுபோல் 'மத்ரஸா' எனும் சொல்லின் தூய்மைக்கும் பங்கம் விளைவித்துள்ளனர் என்பது வேறு விஷயம்.
மேற்கு வங்க அரசின் இந்த அறிவிப்பிற்கு முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசு அறிவிப்பின் முதல் கட்டமாக, சிறுபான்மையினர் பெருகியுள்ள 11 மாவட்டங்களில் 11 ஆங்கில மத்ரஸாக்கள் துவங்கப்பட உள்ளன.
இந்த மத்ரஸாக்களில் பயிலும் மாணவர்கள் இஸ்லாமியக் கல்வியினை ஆங்கில மொழியில் பயில்வர். இது ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப் பள்ளி வரையிலான பாடத்திட்டமாகும்.
"மேற்கு வங்கத்தின் பத்தொன்பது மாவட்டங்களிலும் பத்தொன்பது புதிய இஸ்லாமிய மத்ரஸாக்கள் உருவாக்கப் படும். இதன் அடிப்படை மொழி ஆங்கிலமாக இருக்கும்!" என்கிறார் மேற்கு வங்க சிறுபான்மை வளர்ச்சித்துறை அமைச்சரும் மத்ரஸாக் கல்வி அமைச்சருமான அப்துல் சத்தார். செய்தியாளர்களுக்கு நேற்று (20-12-2009) அளித்த பேட்டியில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடையே மேலும் பேசுகையில், "இத்தனை காலமாக இருந்து வந்த எங்களின் மரபுக் கல்வி முறையினை இந்த ஆங்கில மத்ரஸாக்கள் முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்று நம்புகிறோம். இன்றைய காலகட்டத்திற்குக் கட்டாயத் தேவையான ஆங்கிலக் கல்வியோடு இஸ்லாமிய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கு இத்தகைய மத்ரஸாக்கள் உதவியாக இருக்கும். இத்தகைய மத்ரஸாக்கள் மூலம் பயிலும் மாணவர்கள், நவீன யுகக் கல்வியாளர்களோடு போட்டி போடும் வகையில் சிறந்த பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நெறிஞர்களாகவும் மாறுவர். இஸ்லாமிய மத்ரஸாக் கல்வியில் நவீனத்துவம் என்பது காலத்தின் கட்டாயம் என்பதை, தாமதம் என்றாலும் சரியாகவே உணர்ந்திருக்கிறோம்!" என்கிறார் அப்துல் சத்தார்.
மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே மாநில அரசு நடத்தும் 474 மத்ரஸாக்கள், அரசு பள்ளிக் கூடங்களிலேயே இயங்கி வருவதும், இத்தகைய மத்ரஸாக்களில் முஸ்லிமல்லாத, பிற மத மாணவர்கள் 20% இடம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், புதிய மத்ரஸாவில் இஸ்லாமியக் கல்வியுடன் நவீன அறிவியல், கணிதம், கணினிக் கல்வி ஆகியவை இணைவதைக் கண்டு கவரப்பட்டு புதிய மாணவர்கள் பெருமளவில் விண்ணப்பித்துள்ளனராம்.
"பல்லாயிரக் கணக்கான ஏழை இந்திய மாணவர்களின் கல்வி நிலையினை மேம்படுத்துவதே இத்தகைய ஆங்கில மத்ரஸாக்களின் குறிக்கோளாகும்" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
"தற்போதைக்கு மத்ரஸாக்கள் தந்து கொண்டிருக்கும் ஆங்கிலம் அல்லாத, மாநில மொழிகளை மட்டும் போதிக்கும் கல்வி முறையினால் எதிர்காலக் கல்வி-வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயத்தை உணர்ந்திருப்பதால் ஏழை முஸ்லிம் மாணவர்கள்கூட சாதாரண மத்ரசாக்களில் சேர்ந்து கல்வி பயிலத் தயங்குகின்றனர். இத்தகையச் சூழல் தொடருமானால் ஏழைகள் என்றென்றும் நிர்க்கதியாய் நிற்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கை மணி ஒலித்ததைக் கண்டு, இத்தகைய ஆங்கில மத்ரஸாக்களை உருவாக்குகிறோம். இதன் மூலம் கல்வி பெறும் மாணவர், நிறைய பொருட்செலவில் ஆங்கிலக் கல்வியை வழங்கும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாகக் கல்வி அறிவில் மேம்பட்டு நிற்பர்" என்று தொடர்கிறார் அப்துல் சத்தார்.
"சிறந்த கல்வி என்றாலே ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி என்றாகி விட்ட இந்தியக் கல்விச் சூழலில், தரமான கல்வியை இலவசமாக வழங்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இப்புதிய ஆங்கில வழி மத்ரஸாக்கள் செயல்படும்" என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள இந்த மத்ரஸாக்கள், ஏழை-சிறுபான்மை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன.

" கல்வி நிலையில் மேம்பாடு அடைவதில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், நாட்டில் சுய கவுரவத்துடன் மதிக்கப்படுவதற்கும் அதிகார, ஏகாதிபத்திய, ஃபாஸிஸ சக்திகளால் அநியாயமாக ஒடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறவும் தேவையான அதிகாரங்களிலும் உயர் வேலை வாய்ப்புகளிலும் மட்டும் முஸ்லிம்களின் சதவீதத்தை ஒப்பு நோக்குவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும் "

பல்லாண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் கல்வி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டனர். அதனாலேயே ஆதிக்கச் சக்திகளின் அடக்குமுறைக்கு உள்ளாகிப் பெரும் அவலங்களைச் சந்திக்க நேர்ந்தது. இதனைச் சமீபத்தில் சச்சார் கமிட்டி அறிக்கை மிகத்தெளிவாக வரைந்து காட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில், "நாட்டுப்பற்றுள்ள இந்திய முஸ்லிம்கள் ஆங்கில மொழியைக் கற்பதும், கற்பிப்பதும் ஹராம்" என்று ஃபத்வாக்கள் கொடுக்கப் பட்டு அதில் உறுதியாக நின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த மனோநிலை முஸ்லிம்களிடையே மாறாமல் இருந்திருக்கிறது என்பதற்கு ஆங்கிலக் கல்வியில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கியிருப்பதே சாட்சியாக உள்ளது. இதனாலேயே  அரசின் அதிகார மையங்களான நீதித்துறை, காவல்துறை, இராணுவம், உளவுத்துறை ஆகிய எத்துறையிலும் முஸ்லிம்களைக் காண்பது மிக அரிதான விஷயமாக உள்ளது. அத்தோடு உயர்கல்வி கற்பவர்களுள் முஸ்லிம்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர்.
"கல்வியைத் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று ஊக்குவிக்கும் இஸ்லாத்தைத் தமது வாழ்வியல் நெறியாகக் கொண்ட இந்திய முஸ்லிம்கள், ஏனோ கல்வி விஷயத்தில் உறக்கம் கலைந்து இன்னும் எழுந்த பாடில்லை.
கிறித்துவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினரை ஒப்புநோக்குகையில் முஸ்லிம்கள் மட்டுமே அவர்களின் சதவீதத்திற்கொப்ப கல்வி நிலையங்களில் இடம் பெற்றிருக்கவில்லை. கல்வி நிலையில் மேம்பாடு அடைவதில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், நாட்டில் சுய கவுரவத்துடன் மதிக்கப்படுவதற்கும் அதிகார, ஏகாதிபத்திய, ஃபாஸிஸ சக்திகளால் அநியாயமாக ஒடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறவும் தேவையான அதிகாரங்களிலும் உயர் வேலை வாய்ப்புகளிலும் மட்டும் முஸ்லிம்களின் சதவீதத்தை ஒப்பு நோக்குவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.
அத்தோடு, காலனித்துவ காலத்திலிருந்தே மேற்கு வங்காளத்தின் ஆரம்பப் பள்ளிகளில் இடம் பெற்று வந்த ஆங்கிலக் கல்வி, கடந்த 1980இல் இடதுசாரி மார்க்ஸிஸ்ட்-இன் ஆட்சிக் காலத்தில் முற்றிலும் நீக்கப் பட்டதும் குறிப்பிடத் தக்கது.
"ஆங்கிலம் கற்காததால் உயர் கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் இடம் கிடைக்காமல் முன்னேற முடியாமல் போராடும் முஸ்லிம் மாணவர்கள் அதிகரித்துள்ளதால், ஆங்கில மீடியம் மத்ரஸாக்களின் தேவை இன்றிமையாதது!" என்கிறார் நூருல் இஸ்லாம். இவர் மேற்கு வங்காளத்திலுள்ள கலத்பூர் மத்ரஸாவின் தலைமை ஆசிரியர் ஆவார்.
இத்தகைய ஆங்கில மீடியம் மத்ரஸாக்கள், ஆங்கிலக் கல்வியறிவு பெற வசதியற்ற முஸ்லிம் மாணவர்கள் இதுநாள்வரை கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, எதிர்காலச் சமுதாயக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் உயர் கல்விகளிலும் வேலை வாய்ப்புகளிலும் நவீன தொழில் சந்தைகளில் நிலவும் போட்டிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையிலும் தரமான கல்வியை வழங்கி நவீன தொழில் சந்தையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால்களையும் ஃபாஸிஸ, அதிகார வர்க்கங்களின் அடக்குமுறைகளையும் முறியடிக்கத் தயாராகும் என்று எதிர்பார்ப்போம்.
ஆக்கம்: அபூ ஸாலிஹா