13.9.07

புனித ரமளான் நல்வாழ்த்துக்கள்

அகிலமெங்கும் வாழும் ஆக்கூர் ஓரியண்டல் முன்னாள் மாணவர்கள், மற்றும் அவர்கள்தம் குடும்பத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர் அனைவருக்கும் சங்கமிகு ரமளான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் புனித ரமளானின் நற்பயனை அடைந்தவர்களாக நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக. ஆமீன்.ஓரியண்டலில் நாம் பயின்ற காலகட்டத்தில் நாம் உண்ட உணவையும், அந்த உணவை உண்டு நாம் நோற்ற நோன்புகளையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்.

இன்று இறையருளால் நம்மில் பலர் மிகுந்த வசதி வாய்ப்புகளுடன் வாழ்கிறோம். ஆனால் நாம் பயின்ற பள்ளியில் இன்றும் வசதி குறைந்த எண்ணற்ற மாணவர்கள் நோன்பு நோற்கின்றனர். அவர்களையும் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போமா?நம்மில் எத்தனையோ பேர் பல ஆண்டுகள் இலவச உணவை உண்டோம். அதற்கு என்ன கைம்மாறு செய்தோம்? இப்போதாவது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதற்கு இன்னுமா நமது மணம் இடம் கொடுக்கவில்லை?

தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். அதனால் பயன் பெறும் மாணவர்கள் தங்களுக்காக துஆச் செய்வார்கள். மார்க்கக் கல்வி பயிலும் அந்த மாணவர்களின் துஆ இம்மையிலும் மறுமையிலும் நமக்கு பயனளிக்கும். இன்ஷா அல்லாஹ்.

0 comments: