18.4.08

மேற்கல்வியைத் தொடர மேலான உதவிகள்

கல்வியில் பின் தங்கியுள்ள இஸ்லாமிய சமூகத்தை எதிர்காலத்தில் கல்வியில் வளம்பெற்ற சமூகமாக வார்த்தெடுக்க பல்வேறு இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பை நல்கி வருகின்றன. இவ்வகையில் 'சமூக நீதி அறக்கட்டளை' மேற்கல்வி கற்க ஆர்வமுள்ள, அதேசமயம் வறுமை காரணமாக தொடர இயலாத ஆதரவற்ற முஸ்லிம் மாணவர்கள் தங்கள் மேற்கல்வியைத் தொடர அருமையான திட்டங்களை வகுத்து மாணவர்களை ஊக்குவிக்க முன்வந்துள்ளது.
ஆதரவற்ற மாணவர்கள் தாங்கள் பள்ளி இறுதி வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், அத்துடன் ஆதரவற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தி ஊர் ஜமாஅத் தலைவர், அல்லது தாங்கள் சார்ந்துள்ள ஏதேனும் இஸ்லாமிய இயக்கக் கிளைகளின் அத்தாட்சிகளுடன் சமூக நீதி அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் வலைத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது சமூக நீதி அறக்கட்ளையின் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
இஸ்லாமிய சமூகம் கல்வியில் உயர்வு பெற, இத்தகவலை தங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அனுப்பி சமுதாய சேவையில் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

வலைத்தள முகவரி
http://samooganeethi.org/

ஆதரவற்ற மாணவர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டிய முகவரி
SAMOOGA NEETHI ARAKATTALAI
NEW NO : 129, OLD NO : 64
THAMBUCHETTY STREET
CHENNAI – 600 001
TAMIL NADU

PHONE : +91 9382 155 780.

0 comments: