12.1.10

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

நாமும் கலெக்டராவோம் (IAS) கமிஷ்னராவோம் (IPS)
- வெரும் 70 ரூபாய் செலவில் தயாராகுங்கள் பட்டதாரிகளே !!!








இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான நுழைவு தேர்வு (IAS, IPS, IFS etc…) விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முதல் நிலை தேர்விற்க்கான விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுவிலும் தேர்சி பெற்று நேர்முக தேர்வுவில் தேர்வு பெற்றால் 24 உயர் பதவியியில் ஒன்றை பெறலாம். இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசு பதவிக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெருவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும் (கலெக்டர்), காவல் துறை ஆணையராகவும் (கமிஷ்னர்) முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான், பெண்களுக்கு ரூ.20 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும், குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாதது (அல்லது மிக குறைவாக இருப்பது) மிக முக்கிய காரணங்களில் . சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் நாம் IPS, IAS -இல் தேர்வாகி காவல் துறை ஆனையாளராகவும், மாவட்ட கலெக்டராகவும் ஆனால் மட்டுமே நமது சமுதாயத்திற்க்கு பதுகாப்பு அளிக்க முடியும். சமுதாய முன்னேறத்திற்க்கும் பாதுகாப்பிற்க்கும் அரசியல் தீர்வல்ல, படித்து இது போன்ற பதிவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அரசியல் மாயை காட்டி உங்களின் உழைப்பில் பதவி சுகம், பணம் அடையதுடிப்பவர்களை தூக்கி எறியுங்கள், நேரத்தை வீணாக்காமல் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.
இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பாட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வருங்கள் என உங்களை மாணவர் அணி அன்புடன் அழைகின்றது.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்க்கு மற்றும் ஓர் காரணம் , இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் (ன்று தங்களை சொல்லிகொள்பவர்கள்). இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய பட்டதாரிகளின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC ( IAS,IPS,IFS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுறித்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


தங்கள் பிள்ளைகளை இலச்ச கணக்கில் பணத்தை கட்டி படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் 70 ரூபாயில் எழுதப்படும் இந்த தேர்வை எழுத தங்கள் பிள்ளைகளை தூண்டுவதில்லை. இதில் நாம் பெற்றோர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பொதுவாகவே நமது சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிவதில்லை, மேலும் வழிகாட்ட யாரும் முன் வருவதில்லை, அல்லது அவர்களின் வழிகாட்டல் மிக குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே உள்ளது (இப்போது உங்களுக்கு வழிகாட்ட நமது மாணவர் அணி தயாராக உள்ளது). இது வரை முஸ்லீம் இயக்கங்களை நடத்திய தலைவர்கள் இதில் அக்கரை காட்டாமல் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் அரசியலை பிடித்துக்கொண்டு முஸ்லீம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அரசியலைவிட கல்வி முன்னேற்றம் தான் ஒரு சமூகத்திற்க்கு பாதுகாப்பையும், சுகாதாரத்தையும், சுய சிந்தனையும் கொடுக்கும். அரசியல்வதிகள் ஐந்து வருததில் மாறிவிடுவார்கள் ஆனால் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) போன்றவர்கள் பல வருடங்கள் பணியாற்றி சமுதாயத்திற்க்கு பாதுகாப்பும் முன்னேற்றமும் வழங்க முடியும். எனவே தான் நமது மாணவர் அணி கல்வி முன்னேற்றத்தை கையில் எடுத்து இதுவரை யாரும் செய்திராத கல்வி வளர்ச்சி பணியை தமிழகத்தின் மூளை முடுக்கெள்ளாம் செய்து வருகின்றது.


IAS, IPS நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு UPSC தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.





ஆக்கம் :
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி








0 comments: