7.3.10

2013-ல் MBBS , BE படிப்பு-தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு!

டெல்லியில் நேற்று (16-2-2010) நடைபெற்ற பள்ளிக் கல்வி கவுன்சில் கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் கலந்துகொண்டு பேசுகையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2013ம் ஆண்டு இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார்.
‘நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவதன் மூலம் பொறியியல், மருத்துவம், பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அது வழி வகுக்கும்.
மேலும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு படித்து தயார் செய்து கொள்ளும் மாணவர்களின் சுமையை இந்த ஒரே நுழைவுத் தேர்வு மூலம் குறைக்க முடியும்.
அமெரிக்காவில் உள்ள எஸ்ஐடி நுழைவுத் தேர்வின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2013ல் இத்திட்டம் அமலுக்கு வரும்’ என்றார்.
இது வரவேற்க்கதக்க அறிவிப்பாகும். இப்படி தேசிய அளவில் பொது நுழைவுதேர்வு நடத்துவது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நுழைவுதேர்வுகள் நடத்துவதால் மாணவர்களின் பணம் விரயம் ஆகின்றது. மேலும் நுழைவு தேர்வு பயிற்சி அளிக்கின்றோம் என பல பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பணத்தை கொள்ளை அடிக்கின்றன, அந்த செலவும் மாணவர்களுக்கு குறையும்.
இட ஒதுக்கீடு – சிக்கல் :
ஆனால் இதில் உள்ள பெரிய சிக்கல் இடஒதுகீடு ஆகும், நமக்கு மாநில அரசில் மட்டுமே இட ஒதுகீடு உள்ளது. மத்திய அரசில் தனி இட ஒதுகீடு இல்லை. மாநில அரசு நடத்தும் நுழைவுதேர்வு மூலம் கிடைக்கும் தனி இட ஒதுக்கிடின் அடிப்படையில் நமக்கு இடம் வழங்கபட்டு வருகின்றது (சில பிரிவுகளுக்கு ரோஸ்ட்டர் என்று நம்மை மாநில அரசு ஏமாற்றி கொண்டு இருக்கின்றது அது வேறு கதை) மத்திய அரசின் இந்த பொது நுழைவு தேர்வை நடைமுறைக்கு வருவதற் முன்னால் முஸ்லீம் மாணவர்களுக்கு மத்திய அளிவிலும் இட ஒதுகீடு கொடுத்தால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அல்லது தேர்வை மட்டும் நடத்திவிட்டு இடங்களை ஒதுக்கும் உரிமையை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும். மாணவர்களுக்கு நல்லது செய்கின்றோம் என்ற பெயரில் மத்திய அரசு நாம் கஷ்டப்பட்டு பெற்ற சிறிய இட ஒதுகீடையும் பரிக்காமல் இருந்தால் சரி.
செய்தி- S.சித்தீக்.M.Tec
நன்றி-TNTJ.NET

0 comments: