13.6.08

சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அரசு அறிவிப்பு

சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
அரசு அறிவிப்பு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சிறுபான்மையினர் மாணவ மாணவியர் களுக்கு பள்ளிப்படிப்பு தொடர்பான கல்வி உதவித்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மத்திய அரசால் வெளியிடப்பட்ட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை மத்திய மாநில அரசின் நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 15340 சிறுபான்மையின மாணவ மாணவியர்க்கு நடப்பு 2008-2009 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் ஏழாயிரத்து முந்நூற்றி இருபது முஸ்லிம் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள்:
மாணவ மாணவிகள் பள்ளி இறுதித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண் களுக்கு குறையாமல் பெற்றிருத்தல் வேண்டும். முதல் வகுப்பு மாணவ மாணவியர்கள் வருமான வரம்பு இருத் தல் போதுமானது. பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 2008 லி 2009 ஆம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது. இந்த ஒதுக்கீட்டில் 30 விழுக்காடு மாணவியர்களுக்கு வழங்கப்படும். போதுமான மாணவியர்கள் இல்லாத பட்சத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவர் களுக்கு வழங்க இயலாது. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். மாணவ மாணவியர் களின் வருகை சீராக இருக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் இது தொடர்பாக வருமான சான்று ரூ.10 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத் தாளில் இணைய தளத்தில் உள்ள மாதிரி படிவத்தின் படி ஆச்ச்ண்க்ஹஸ்ண்ற் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இக்கல்வி உதவித் தொகையில் சேர்க்கை, கற்பிப்பு மற்றும் பராமரிப்புக் கட்டணங்களில் உள்ளபடியான தொகை அல்லது உதவித் தொகை, இதில் எது குறைவானதோ அது வழங்கப்படும் இதன் படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான சேர்க்கை கட்டணம் விடுதியில் தங்கி படிப்பவர், விடுதியில் தங்காது படிப்பவர் என இரு பிரிவினருக் கும் தலா ரூ.500 மட்டும் வழங்கப்படும். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைக்கான கற்பிப்பு கட்டணம் அதிகப்பட்சமாக ஒரு மாதத்திற்கு ரூ.350 மட்டும் வழங்கப்படும்.
பராமரிப்புக் கட்டணமாக 10 மாதங்கள் மட்டும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு விடுதியில் தங்கி பயில்பவருக்கு 10 மாதங்களுக்கு, மாதத்திற்கு ரூ. 600 வழங்கப்படும். விடுதியில் தங்காது பயில்பவருக்கு 10 மாதங்களுக்கும் ரூ.100 வீதம் மாதம் தோறும் வழங்கப்படும். இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் 30.06.2008க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப் படிவம் www.minority affairs.gov.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.tmmk.in/
This post was submitted by முதுவை ஹிதாயத்.
நன்றி: சற்றுமுன்

0 comments: