Showing posts with label 10 ஆம் வகுப்பு. Show all posts
Showing posts with label 10 ஆம் வகுப்பு. Show all posts

26.5.10

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;
4 பேர் 2-வது இடம்
10 பேர் 3-வது இடம்
.
Tirunelveli புதன்கிழமை, மே 26, 10:30 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
 
 நெல்லை மாணவி ஜாஸ்மின் முதல் இடம்;
 
 4 பேர் 2-வது இடம்: 10 பேர் 3-வது இடம்

சென்னை, மே. 26-
பத்தாம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு 8.56 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவுகள் இன்று (புதன்) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.

எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநில அளவில் திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் முதல் இடத்தைப்பிடித்துள்ளார். அவர் 500 மதிப்பெண்களுக்கு 495 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவி ஜாஸ்மின் 100க்கு 100 மதிப்பெண் வாங்கி உள்ளார். அவர் ஒவ்வொரு பாடத்திலும் வாங்கியுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 98

மொத்தம் - 495 


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் 4 பேர் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

1. கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கே. நிவேதிதா 494 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-
 
தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

2. கரூர் கல்வி மாவட்டம் தலப்பட்டியில் உள்ள பி.ஏ. வித்யாபவன் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். சிவப்பிரியா 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 97

மொத்தம் - 494

3. புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.தமிழரசன் 494 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டவர்களில் ஒருவரா வர். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 98

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

மாணவர் தமிழரசன் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழில் மட்டும் ஓரிரு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்திருப்பார்.

4. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங் கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம். பிரியங்கா 494 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 98

கணிதம் - 98

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 494

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடத்தை 10 மாணவ- மாணவிகள் எடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலா 493 மதிப்பெண்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். அந்த 10 மாணவ- மாணவிகள் விபரம் வருமாறு:-

1. தென்காசி கல்வி மாவட்டம் புளியங்குடியில் உள்ள ஏ.வி.எஸ். மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ரம்யா 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல்- 100

மொத்தம் - 493

மாணவி ரம்யா 3 பாடங்களில் 100க்கு 100 வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

2. பாளையங்கோட்டை சாராதக்கர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ஜெயிலின் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாடவாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 99

கணிதம் - 100

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

3. பரமக்குடி ஏ.வி. மேல் நிலைப்பள்ளி மாணவி பி.திலகவதி 493 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 96

ஆங்கிலம் - 98

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

4. பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர் பிரதீப்குமார் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 98

மொத்தம் - 493

5. மதுரை சவுத்கேட் பகுதியில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.ஜெயமுருகன் 493 மதிப்பெண் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 97

கணிதம் - 99

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

6. மதுரை புனித மேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கே.நாகராஜன் 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

7. நாமக்கல் கல்வி மாவட்டம் அனியபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெ.இந்துஜா 493 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 96

கணிதம் - 99

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

8. கரூர் கல்வி மாவட்டம் புன்னம் சத்திரம் சேரன் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ராஜ்சூர்யா 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 96

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 100

மொத்தம் - 493

9. புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.ரேவதி 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் எடுத்த மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 97

ஆங்கிலம் - 97

கணிதம் - 100

அறிவியல் - 100

சமூக அறிவியல் - 99

மொத்தம் - 493

10. ஆரணியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நசீரீன் பாத்திமா 493 மதிப்பெண்கள் பெற்று 3-வது இட சாதனையில் ஒருவராக உள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98

ஆங்கிலம் - 97

கணிதம் - 99

அறிவியல் - 99

சமூக அறிவியல் - 100
மொத்தம் – 493
 

17.12.09

12 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவனை

பிளஸ்-2 தேர்வு அட்டவணை:

2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.

2 - தமிழ் இரண்டாம் தாள்.

4 - ஆங்கிலம் முதல் தாள்.

5 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.

8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.

13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல்,நர்சிங்(ஜெனரல்), புள்ளியியல்.

15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்.

19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.

22 - வணிகவியல், மனையியல், புவியியல்
 
 
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:

மார்ச் 23 -தமிழ் முதல்தாள்.

24 - தமிழ் இரண்டாம் தாள்.

26 - ஆங்கிலம் முதல்தாள்.

29 -ஆங்கிலம் இரண்டாம் தாள்.

ஏப்ரல் 1 - கணிதம்.

5 - அறிவியல்.

7 - சமூக அறிவியல்.

மெட்ரிக்குலேஷன் தேர்வு அட்டவணை:

மார்ச் 23 - தமிழ் முதல் தாள்

24 - தமிழ் இரண்டாம் தாள்

25 - ஆங்கிலம் முதல் தாள்

26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

29 - கணிதம் முதல் தாள்

30 - கணிதம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்

5 - அறிவியல் இரண்டாம் தாள்

7 - வரலாறு மற்றும் குடிமையியல்

9 - புவியியல் மற்றும் பொருளாதாரம்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வு அட்டவணை:

மார்ச் 23 - மொழித்தாள்

25 - ஆங்கிலம் முதல் தாள்

26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

29 - கணிதம் முதல் தாள்

30 - கணிதம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்

5 - அறிவியல் இரண்டாம் தாள்

7 - வரலாறு மற்றும் குடிமையியல்.

9 - புவியியல்

ஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:

மார்ச் 23 - தமிழ்.

24 - மொழித்தாள்-1 சமஸ்கிருதம் மற்றும் அரபி.

26 - ஆங்கிலம் முதல்தாள்

27 - மொழித்தாள்-2 சமஸ்கிருதம் மற்றும் அரபி.

29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.

ஏப்ரல் 1 - கணிதம்.

3 - சிறப்பு மொழித்தாள்-3, சமஸ்கிருதம் மற்றும் அரபி.

5 - அறிவியல்.

7 - சமூக அறிவியல்.

தேர்வு நேரம்:

பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடைபெறும்.

பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12-45 மணிக்கு முடியும்.



 
Rajaghiri Gazzali

--

5.2.09

மாணவ மாணவிகளுக்கு பயிற்சி முகாம்

10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி முகாம்
நாள் : 8-02-09 ஞாயிற்றுக் கிழமை (இன்ஷா அல்லாஹ்)
நேரம் : காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை
பயிற்சி அளிப்பவர் :

நஸிர் அஹமது.B.E
(சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர்)

இடம்

: TNTJ மாநில தலைமையகம்,
30, அரண்மனைக்காரன் தெரு
மண்ணடி,
சென்னை- 600001.
மாணவிகளுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ மாணவர் அணி.

தொடர்பிற்கு : 9884235802

26.12.08

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்
மார்ச் 2 பிளஸ்டூ, 25ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 2008, 18:00 [IST] சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வ தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்குகிறது.ஆண்டு தோறும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்டூ பொதுத் தேர்வுகளுக்கான தேதியை தமிழக அரசின் தேர்வுகள் இயக்குநரகம் இன்று அறிவித்தது. தேர்வுகள் இயக்குநரக இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தேர்வுகள் தொடங்கும் தேதியை அறிவித்தார்.அதன்படி 2009ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. மார்ச் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.