27.10.08

பொறியியல் கல்வி-தகுதி மதிப்பெண் குறைப்பு

சென்னை: பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்தபட்ச பிளஸ் 2 தகுதி மதிப்பெண் வரம்பை தமிழக அரசு குறைத்துள்ளது.சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கெனவே நுழைத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்வியில் சேர்ந்து படிக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆனாலும் கடந்த 2006-07 கல்வியாண்டில் மாணவர்கள் சேராததால் 19,652 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருந்தன. இதேபோல் 2007-08ல் 14,721 இடங்கள் காலியாக இருந்தன.இந்த ஆண்டு அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந் நிலையில் பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்தாண்டு முதல் பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சமாக பொதுப்பிரிவினர் பெறவேண்டிய மதிப்பெண்களான 60 சதவீதம் 55 சதவீதகமாகக் குறைக்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டோருக்கு 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும், மிகவும் பிற்பட்ட மற்றும் சீர் மரபினருக்கு 50 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது.இதன்மூலம் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் பொன்முடி.
நன்றி: Oneindia

26.10.08

மாணவர்களுக்குப் பயனுள்ள சில தளங்கள்

SOME USEFULL DOMAINS WILL BE DISCUSSED HERE: மாணவர்களே, முதலில் இந்த சுட்டியினை(link) பாருங்கள், please all student's visit this link,

24.10.08

FREE Scholarship, கல்வி உதவித்தொகை

SOME USEFULL DOMAINS WILL BE DISCUSSED HERE: FREE Scholarship, கல்வி உதவித்தொகை

Education Help, இலவச கல்வி உதவி,

ஏழை மாணவர்கள் பயனடைய சில இணைய தள முகவரிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
SOME USEFULL DOMAINS WILL BE DISCUSSED HERE: FREE Education Help, இலவச கல்வி உதவி,

19.10.08

கல்விச்சேவை தகவல்கள்!


கல்விச் சேவை பற்றிய சில தகவல்களையும் அவற்றை அளிக்கும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்! - சத்தியமார்க்கம்.காம்

நான்கு ஆண்டு பி.பி.ஏ.,
நான்கு ஆண்டு பி.பி.ஏ., டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படிப்பை ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி நடத்துகிறது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனத் துடன் இணைந்து நடத்தும் இந்தப் படிப்புக்கு, ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது!
மேலும் விவரங்களுக்கு: www.nithm.ac.in
ஐ.ஓ.சி., ஸ்காலர்ஷிப்
விளையாட்டு வீரர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குகிறது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஜூனியர் லெவல் விளையாட்டு வீரர்கள், அத்லெட்டிக்ஸ், டென்னிஸ், கேரம், ஹாக்கி, கோல்ஃப், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் போட்டிகளில் விளையாடுபவர்களும் இந்த உதவித் தொகை பெற விரும்பினால், வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., இன்ஜினீயரிங், எம்.பி.பி.எஸ்., எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்கள் 450 பேருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவிருக்கிறது ஐ.ஓ.சி. நிறுவனம்!
மேலும் விவரங்களுக்கு: www.iocl.com

ஐ.ஐ.டி-யில் எம்.பி.ஏ.,
மும்பை, டெல்லி, கான்பூர், கோரக்பூர், சென்னை, ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.டி-க்களில் மேலாண்மைப் படிப்புகள் படிக்க தனியே நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் (Joint Management Entrance Test). கான்பூர் ஐ.ஐ.டி நடத்தும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், அக்டோபர் 17-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். டிசம்பர் 14-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்!
மேலும் விவரங்களுக்கு: http://www.iitk.ac.in/gate

தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட்.,
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொலைநெறிக் கல்வி இயக்ககம் நடத்தும் பி.எட்., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு, அக்டோபர் 18-ம் தேதி நடைபெறஇருக்கிறது. இரண்டு ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீயரிங்
நெய்வேலியில் உள்ள நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினீ யரிங் துறையில் போஸ்ட் டிப்ளமோ படிப்பில் சேரலாம். ஓராண்டுப் படிப்பு இது. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் படிப்புகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றமாணவர் கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 27. விண்ணப் பங்களை செப்டம்பர் 22-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.nptisr.com

சிவில் சர்வீஸ் தேர்வுப் பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சென்னை அண்ணா நகரில் உள்ள 'அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்' பயிற்சி அளிக்கிறது. வருகிற டிசம்பர் முதல் 6 மாதங்களுக்குப் பயிற்சி. முழு நேரப் பயிற்சி அல்லது பகுதி நேரப் பயிற்சி என வசதிக்கேற்ற பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். முழு நேரப் பயிற்சிக்கு 200 மாணவர்களும் பகுதி நேரப் பயிற்சிக்கு 100 மாணவர்களுக்கும் அனுமதி. முழு நேரப் பயிற்சி மாணவர்களுக்கு விடுதி வசதி உண்டு. அனுமதிக்கு நுழைவுத் தேர்வு உண்டு. நவம்பர் 9-ம் தேதி நுழைவுத் தேர்வில் பங்கேற்க, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கிடைக் கும்படி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: www.civilservicecoaching.com
பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை!
பேங்க் ஆஃப் பரோடாவில் ஆயிரம் கிளார்க் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறைந்தபட்சக் கல்வித் தகுதி பிளஸ் டூ என்றாலும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 6-ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வு நவம்பர் 30-ம் தேதி!
மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.com
டெக்னிக்கல் ரைட்டிங் பயிற்சி
விளக்கக் கையேடுகள், பதிவேடுகள், பயனாளிகளுக்கான குறிப்புகள் போன்றவற்றை ஓர் இலக்கண வரையறையுடன் எழுதுவதுதான் டெக்னிக்கல் ரைட்டிங் அண்ட் டாகுமென்ட்டேஷன். இணையத்திலும் இந்தப் பணிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. டெக்னிக்கல் ரைட்டிங் அண்ட் டாகுமென்ட்டேஷன் குறித்த ஒரு மாதப் பயிற்சியை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சி.பி.டி.இ. மையம் வழங்குகிறது. எம்பெட்டட் சிஸ்டம் டிசைன் குறித்த மூன்று மாத குறுகிய காலப் பயிற்சியையும் இந்த மையம் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: 99400 18051, 04422201777
அட்வர்டைசிங்!
அகமதாபாத் முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் நிறுவனம் ஹூயூக்ஸ்நெட் குளோபல் எஜுகேஷன் நிறுவனத்துடன் இணைந்து அட்வர்டைசிங் அண்ட் பப்ளிக் ரிலேஷன் முதுநிலை சான்றிதழ் படிப்பைத் தொடங்கியுள்ளது. இந்த ஓராண்டுப் படிப்புக்குக் கட்டணம் ரூ.68,500. பட்டப் படிப்பை முடித்த மாணவர் களும் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களும் இதில் சேர விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.hnge.in
ரீ-டெய்ல் மேனேஜ்மென்ட் பல்கலைக்கழகம்
18 லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் சில்லறை வர்த்தகத் துறையில் தகுதி வாய்ந்த திறனாளர்களை உருவாக்குவதற்காக புனே அருகே புதிதாக நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உருவாகிறது. ரீடெய்ல் மேனேஜ்மென்ட் தொடர்பான படிப்புகளை நடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணியில் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமுதாய வானொலிப் படிப்பு!
சமுதாய வானொலி குறித்த சான்றிதழ் படிப்பை வரும் ஜனவரி முதல் தொடங்கப்போவதாக இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ப்ளஸ் டூ முடித்த மாணவர்களும், சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம்!
கலைத்திறன் படைத்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை!
இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம், கைவினைத் திறன் உள்பட கலைத் திறன் படைத்த 10 வயதிலிருந்து 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கல்ச்சுரல் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 500 மாணவர்களுக்குத் தலா ரூ.3,600 வீதம் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிசம்பர் 31-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள சென்டர் ஃபார் கல்ச்சுரல் ரிசோசர்ஸ் அண்ட் டிரெயினிங் அமைப்புக்குக் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்!
மேலும் விவரங்களுக்கு: www.ccrtindia.gov.in
என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட்!
என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட் என்ற புதிய சான்றிதழ் படிப்பை இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. அமைப் பின் ஒத்துழைப்புடன் இந்தப் படிப்பு தொடங்கப் பட்டுள்ளது. ப்ளஸ் டூ படித்த மாணவர்கள் இப் படிப்பில் சேரலாம். பத்தாம் வகுப்பு படித்து மூன்று ஆண்டு தொண்டு நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர்களும் சேரலாம். விண்ணப்பம் அனுப்பக் கடைசித் தேதி அக்டோபர் 31.
ஆக்ஸ்போர்டு பல்கலையில் தற்கால இந்தியா!
இந்தியக் கலாசாரத்துக்கு இன்னொரு பெருமை. இந்தியாவைப் பற்றியும் அதன் கலாசார, பொருளாதார அம்சங்களைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்காக பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தற்கால இந்தியா பற்றிய எம்.எஸ்ஸி., படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் முக்கியப் பொருளாதாரச் சக்தியாக உருவாகி வரும் இந்தியா பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அடுத்து இப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது!
டெல்லியில் லா ஸ்கூல்!
சட்டக் கல்லூரிகள் இருந்தாலும்கூட, அதைவிட லா ஸ்கூல்களில் படிக்கும் மாணவர் களுக்கு நல்ல வேலை கிடைத்துவிடுகிறது. டெல்லியிலும் நேஷனல் லா ஸ்கூல் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டுக் கட்டணம் ரூ.1.25 லட்சம் (இரண்டு செமஸ்டர் களுக்கு)!
வேலூர் சி.எம்.சி-யில் மருத்துவப் படிப்பு!
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.டி., எம்.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கு வருகிற டிசம்பர் 13-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப் படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்!
மாணவர்களுக்குக் கூடுதல் நேரம்!
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின் போது வினாத்தாள்களைப் படித்துப் புரிந்து கொள்வதற்காக ஏற்கெனவே 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது விடைத்தாளில் பதிவு எண்களைப் பூர்த்தி செய்வது உள்ளிட்டவற்றைப் பதற்றமில்லாமல் மாணவர்கள் செய்வதற்கு வசதியாக மேலும் 5 நிமிடங்கள் வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான ஆய்வுக் குழு அறிக்கையைப் பொறுத்து, இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்!

அஞ்சல் வழி மேற்படிப்பு:

அஞ்சல் வழி மேற்படிப்புகளுக்காக இந்திய அரசு ஒரு நடுவண் மையத்தை ஏற்படுத்தியுள்ளது.. அதன் பெயர் Distance Education Council (DEC). இந்த அமைப்பு அஞ்சல் வழி கல்வியை முறைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களின் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் வலையேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பின் வலைமனை www.dec.ac.in இந்தியாவில் Distance Education தற்போது மிக பலம் பெற்ற வகையில் வளர்ந்து வருகிறது. முதலாவது, Online Education Introduction - இது இன்னும் கருத்து நிலையிலே இருக்கிறது. இரண்டாவது, Convergence System - கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மற்றுமொரு பட்டப்படிப்பை படிக்க அனுமதி.. இவ்வளவு நாட்கள் அதை செய்திருந்தால் அது அனுமதிக்கப் பட்டதல்ல.. மூன்றாவது, அத்தனை பட்டப் படிப்புகளையும் முறையான வகையில், குறிப்பிட்ட தரத்துடன், தேவைக்கேற்ற நேரத்தில் படிக்க முடிகிறது. மேலதிக விபரங்கள் www.ignou.ac.in

தொகுத்தவர்கள்: எம். ரிஷான் ஷரீஃப் மற்றும் ஏ. அஹமத் ஜுபைர்
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

17.10.08

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா

முதுவை ஹிதாயத்: சென்னையில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழா

14.10.08

சுவீடனில் இலவசமாகப் படிக்கலாம் வாங்க

நிறைய நேரங்களில் சாதாரண உரையாடல்கள் கூட வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் நிகழ்வுகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடலாம். இந்த வருட ஆரம்பத்தில் வாழ்க்கையில் ஒரு மாற்றம் உடனடியாகத் தேவை என எண்ணிக்கொண்டே ஒரு முறை பதிவர் 'மாற்று' ரவிசங்கருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது, எதேச்சையாக மேற்படிப்பு பற்றி பேச்சு ஆரம்பித்தது.
அவர் உரையாடலின் ஊடாக 'ஸ்கேண்டிநேவியன்' நாடுகளில் படிப்பு இலவசமாகத் தரப்படுகிறது என சொன்னபொழுது , எனக்குள் நீண்ட நாட்களாக மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்திற்கு மீண்டும் உயிரோட்டம் கிடைத்தது. மனிதனின் சிறந்த உருவாக்கங்களில் ஒன்றான கூகிளில் தேட ஆரம்பித்தேன்.ஸ்கேண்டிநேவியா நாடுகள் என்பது டென்மார்க்,சுவீடன்,நார்வே,பின்லேந்து மற்றும் ஐஸ்லேந்து.
டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டதாலும், பின்லாந்து பல்கலைக் கழகங்கள் 75% மதிப்பெண் எதிர்பார்த்ததாலும் , நார்வே, ஐஸ்லேந்து குளிர் பிரதேசங்களாக இருப்பதாலும் எஞ்சிய சுவீடன் பற்றி தேட ஆரம்பித்தேன்.தேடலில் மிக மிக மிக அத்தியாவசியமான மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு தகவல் தரப்பட்டிருந்தது.
இந்தியாவில் தொழில்நுட்பம்,பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புபடித்திருப்பவர்களுக்கு ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண் சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீண்ட காலமாக எனது மேற்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடாமல் இருந்ததற்கு இந்த மொழித்தேர்வும் ஒரு காரணம். ஆகையால், மக்களே சுவீடனில் மேற்படிப்பு படிக்க IELTS/TOEFL போன்ற ஆங்கில மொழித்தேர்வுகள் எழுதத்தேவை இல்லை. இது பி.எஸ்.சி படித்திருப்பவர்களுக்கும் பொருந்தும். இந்த விபரத்துக்கான சுட்டியைப்படிக்க இங்கே சுட்டவும்.
ஐரோப்பாவில் அமைதியான நாடுகளில் ஒன்று என பொதுவாக அறியப்படும் சுவீடனில் படிப்புக்க்கட்டணம் கிடையாது. மொத்த படிப்புக்கான செலவும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.அது எல்லா நாட்டு குடிமக்களுக்கும் பொருந்தும்.
சுவீடனில் மொத்தம் 48 கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் அரசாங்கமே நடத்துபவை. இவற்றின் கல்வித்தரம் அனைத்திலும் ஏறக்குறைய சமமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறைய மக்களால் அறியப்படும் பல்கலைகழகங்களின் பெயர்கள், ராயல் இன்ஸ்டிடியுட் ஆஃப் டெக்னாலஜி(KTH, உப்பசாலா, கோதன்பர்க், சால்மர்ஸ், லுந்த் மற்றும் பிலெக்கிஞ் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி ஆகியன.)(BTH- Blekinge Institute of Technology கல்லூரியில் தான் நான் Software Engineering படிக்கிறேன். BTH மென்பொருள் துறைக்காகவே அப்போது மிகவும் பின் தங்கி இருந்த பிலெக்கிஞ்ச் மாகாணத்தில் ரோன்னிபே,கார்ல்ஸ்க்ரோனா,கார்ல்ஷாம் ஆகிய மூன்று நகரங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.)
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் நேரிடையாக அனைத்து பொறியியற் கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பிக்கும் முறை வைத்திருப்பது போல, சுவீடனில் படிக்க Studera என்ற மையப்படுத்தப்பட்ட முறையின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அதற்கான இணையத்தளம் www.studera.nu
ஆங்கிலத்தில் இணையதளத்தைப்பார்க்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும். ஸ்டூடரா தளத்தில் உங்களுக்கான கணக்கைத் துவக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கான 4 விருப்பத்தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்கலாம்.(போன வருடம் 8 விருப்பத்தேர்வுகளை வைத்திருந்தார்கள். இந்த வருடம் 4 ஆக குறைத்துவிட்டார்கள்.)
இணையத்தின் வாயிலாக விண்ணப்பித்துவிட்டு , நமது சான்றிதழ்களை நோட்டரி பப்லிக் கையொப்பம் பெற்று சுவீடனுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.
சுவீடன் பல்கலைகழகங்களில் வருடத்தில் ஜனவரியிலும் செப்டம்பரிலும் என இரண்டு முறை சேர்க்கை முறை இருக்கும். அடுத்த 2009 செப்டம்பர் சேர்க்கைக்கு 2009 பிப்ரவரி இரண்டாவது வாரம் கடைசியாக இருக்கும்.செப்டம்பரில் வருபவர்களுக்கு மே மாத இறுதியில் சேர்க்கை நிலவரம் அறிவிக்கப்படும். அனுமதி கிடைத்தவுடன் விசா விற்கு விண்ணப்பிக்கலாம். விசா விண்ணப்பித்து இரண்டு மாதங்கள் கிடைத்து விசா கிடைத்தவுடன் சுவீடனுக்கு பறக்க ஆரம்பிக்கலாம்.ஆகையால் அடுத்த செப்டம்பரில் இங்கு வர நினைப்பவர்கள் இப்பொழுதே பல்கலைக்கழகங்களைத் தங்களது விருப்பப்பாடங்களுக்கு ஏற்ற படி விபரங்களைத் தேட ஆரம்பியுங்கள்.
படிக்கும் காலங்களில் சிக்கனமாக இருந்தால், இரண்டு வருட மேற்படிப்பை 3 லட்சரூபாய்க்கும் குறைவாகவே முடித்துவிடலாம். இருந்த போதிலும் விசா பெறுவதற்கு கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நம் வங்கிக் கணக்கில் காட்டவேண்டும். பெரும்பலான மக்கள் குறுகிய கால கடனாக நண்பர்கள்/உறவினர்களிடம் வாங்கி விசா பெறும் வரை கணக்கில் வைத்துவிட்டு பிறகு திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.
பகுதி நேர வேலை என்பது சுவீடனைப் பொருத்த மட்டிலும் கொஞ்சம் கடினமே என்றாலும் சிறிய அளவிலான வேலைகள் கிடைக்கின்றன. வேலை அதிக அளவில் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் சுவீடீஷ் மொழி . சுவிடீஷ் மொழியை ஆறு மாதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கு இங்கு எளிதாக வேலைக் கிடைக்கும்.
கல்விக்கட்டணம் இல்லை என்பதால், ஸ்காலர்ஷிப் கள் அதிக அளவில் கிடையாது. இருந்தபோதிலும் இந்த சுட்டியில் நீங்கள் சில ஸ்காலர்ஷிப் முறைகளைப்பார்க்கலாம்.
மேற்படிப்பு படிக்க அனைத்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் கடன் தருகின்றனர். 7.5 லட்சம் வரை பெற்றோர் மற்றும் Guarantor உறுதிமொழியுடன் தருகிறார்கள். 4 லட்சம் வரை பெற பெற்றோர் கையொப்பம் மட்டும் போதுமானது. 7.5 லட்சத்துக்கும் அதிகம் பெற சொத்து பத்திரங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். சுவீடனைப்பொறுத்தமட்டில் 4 அல்லது 7.5 லட்சம் வகையில் கல்விக்கடன் விண்ணப்பிக்கலாம்.
இந்தப்பதிவின் அதிமுக்கிய நோக்கம், 2010 ஆம் ஆண்டில் இருந்து சுவீடனும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இன்னும் அரசாங்க ஆணை ஏதும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை எனினும் மிகவிரைவில் செயற்படுத்தப்படலாம் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.இருந்த போதிலும் அதிகாரப்பூர்வமாக ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால் மேற்படிப்பு படிக்க வருபவர்கள் 30 ECTS அதாவது நான்கு பாடங்கள் முடித்துவிட்டால் 48 மாதங்களுக்கு வேலைக்கான விசாவும்/தற்காலிக தங்கும் குடியுரிமையும் (Residence permit) உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி இந்த வருடம் டிசம்பர் 15 லிருந்து செயற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் மேற்கத்திய நாடுகளில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என நினைத்து, ஆங்கிலப்புலமை குறைவு என்பதினாலோ அல்லது அதிகக் கட்டணம் கட்டவேண்டும் என்றோ இது நாள் வரை தவிர்த்து வந்தவர்களுக்கு சுவீடனில் படிக்கும் வாய்ப்பு ஒரு அரிய வரப்பிரசாதம்.
முக்கியமான விசயம், சுவீடனைப்பொருத்தமட்டில் எல்லாம் ஸ்டூடரா இணையத்தளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர எனது கல்லூரி BTH போன்றவை நேரடியாகவும் அவர்களின் கல்லூரித்தளங்களில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
சுவீடனை பொருத்தமட்டில் நேரடியாக செய்ய வாய்ப்பு இருப்பதால் எந்த 'மேற்படிப்பு படிக்க உதவும் ஏஜென்சிகளையும் அணுக வேண்டாம். எந்த ஏஜென்சிக்கும் ஏனைய மேற்கத்திய கல்லூரிகளைப்போல சுவீடன் கல்லூரிகளால் உரிமம் கொடுக்க்கப்படவில்லை. ஏஜென்சிகளை அணுகினாலும் அவர்களும் இந்த ஸ்டூடரா வழியாகத்தான் விண்ணப்பிப்பார்கள். வீணாக 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கன்சல்டன்சி கட்டணம அழ வேண்டாம்.
சுவீடனில் மேலும் நிறைய தமிழ்க் குரல்களைக் கேட்க விருப்பம். மேற்படிப்பு படிக்க விரும்பும் தமிழ் நண்பர்களே வாருங்கள், சுவீடன் உங்களை வரவேற்கிறது.
அதி முக்கிய இணையத்தளங்கள்:
-----------------------------------
நன்றி: சத்தியமார்க்கம்.காம்