10.2.10

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!
பெண்களின் முன்னேற்றமே, நாட் டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் அறிக்கை அபாய எச்சரிக்கை செய்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் National University of Education Planing and Administration (NUEPA) அமைப்பின் வருடாந்திர அறிக்கை பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 633 மாவட்டங்களிலும் உள்ள 12 லட்சத்து 29 ஆயிரம் அரசு அங் கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2008லி2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆரம்ப கல்வி நிலையில் ஒரு கோடியே 48லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகள் படித்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆரம்பகல்வியில் முஸ்லிம் குழந்தை களின் சேர்க்கை கணக்கு மொத்த எண்ணிக்கையில் 11.03 சதவீதம் ஆகும்.
நடுநிலை வகுப்புகளில் 40 லட்சத்து 87 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கை விகிதமாக உள்ளது. இது மொத்தத்தில் 9.13 சதவீதமாகும்.
2006லிலிருந்து 2007லிம் ஆண்டு வரை ஆரம்பக்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவமணிகளின் எண்ணிக்கை 9.39 சதவீதமாக இருந்தது. அதுவே 2007லி2008 ஆம் ஆண்டு 10.49 ஆக உயர்ந்தது. 2008லி2009 ஆண்டில் 11.03 ஆக உயர்ந்திருக்கிறது.
நடுநிலைப்பள்ளி சேர்க்கை விகிதத்தில் 2006லி2007ல் 7.52 சதவீதமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2007லி2008ல் ஆம் ஆண்டில் 8.54 சதவீதமாகவும், 2008லி2009ஆம் ஆண்டு 9.13 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
ஆரம்ப கல்வி வகுப்புகளில் மொத்த முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கையில் குறிப்பாக முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கையில் 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.(கடந்த ஆண்டு 48.67) இது தேசிய விகிதாச்சார விகிதமான 48.38 விகிதத்தை விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கை 49.49. சதவீதமாகும், இது தேசிய விகிதச்சாரமான 47.58விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வியில் 87 ஆயிரத்து 690 பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி விகிதத்தை எட்டியது.
ஜம்முலிகாஷ்மீரில் 12 மாவட்டங்களில் 90 சதவீதம் முஸ்லிம் மாணவமணி களின் வருகை உள்ளது. ஜம்முலி காஷ்மீரில் 15 மாவட்டங்களிலும் பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, லட்சத்தீவுகள் மற்றும் கேரளா மாநிலங் களில் தலா ஒரு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முஸ்லிம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்டங் களில் முஸ்லிம் மாணவர்களின் வருகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது ஒரு வியப்புக்குரிய விஷயம் எனினும் அதே அஸ்ஸாம் மாநிலத்திலும், கேரளா, உத்தர்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஆரம்பநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் பள்ளிச்சேர்க்கை திருப்திகரமான அளவில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அருணாச்சலப்பிரதேசம், பீகார், சத்தீஸ் கர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேகாலயா, மிஜேராம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகி தாச்சாரத்திற்கேற்ப ஆரம்பநிலை மற்றும் நடுநிலைக் கல்விக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அமையவில்லை என அதிர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது 
நன்றி- அபுசாலிஹ் - கூத்தாநல்லூர்

9.2.10

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு.............

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் பெற என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி,

1. அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெற்று வரும் பொறியியல் கல்லூரிகளுக்குள் அவர்கள் படித்து வரும் அதே பிரிவின் கீழ் இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும். மாற்றம் செய்து கொள்ள விரும்பும் கல்லூரிக்கு அரசு அங்கீகரித்துள்ள இடத்திற்கு அதிகமாகாத நிலையில் மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

2. இதேபோல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மற்ற சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்குள் அவர்கள் படித்து வரும் அதே பிரிவின் கீழ் இடம் மாற்றம் பெற்றுக் கொள்ள முடியும். மாற்றம் செய்து கொள்ள விரும்பும் கல்லூரிக்கு அரசு அங்கீகரித்துள்ள இடத்திற்கு அதிகமாகாத நிலையில் இரு கல்லூரி முதல்வர்களின் ஒப்புதலுடன் மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

மேற்காணும் இட மாற்றத்திற்கான அனுமதி ஒரே பல்கலைக் கழகத்தின் கீழ் இணைத்துக் கொண்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் பொருந்தும். பிற பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் படித்து வரும் கல்லூரியில் நடந்த பல்கலைக்கழகத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து மற்றொரு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மே மற்றும் நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் அல்லது இந்த இயக்கத்திற்கான இணைய தளத்தில் மாற்றம் செய்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவத்தில் தற்போது பயின்று வரும் பொறியியல் கல்லூரி முதல்வர் மற்றும் மாற்றம் செய்து கொள்ள விரும்பும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஒப்புதலைப் பெற்று சென்னையிலுள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்தில் இருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பொழுது இட மாற்றத்திற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவால் தரம் உயர்த்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் அதாவது, பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டவற்றில் பயின்று வரும் மாணவர்கள் இடம் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்புகள் இல்லை.

நன்றி-லெப்பைகுடிகாடு.காம்

2.2.10

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?-2 (வீடியோ)

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? -1 (வீடியோ)

14.1.10

TNTJ மாணவர் அணி நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்

TNTJ மாணவர் அணி நடத்தும்
தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்
(இன்ஷா அல்லாஹ்)

 
1.  மேலப்பாளையம் (நெல்லை மாவட்டம்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : காலை 10 மணி

இடம் : மாநகராட்சி கல்யாண மண்டபம், மேலப்பாளையம், நெல்லை மாவட்டம்
சிறப்புரை :  M.அப்துல் பாசித்.B.Sc.B.L (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)                

தொடர்பிற்கு : 9787500719

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ நெல்லை மாவட்ட மாணவர் அணி.
 
 
2. கீழக்கரை
 
நாள் :  வெள்ளி கிழமை  (15/01/2010)

நேரம் : மாலை 4 மணி

இடம் : TNTJ மர்கஸ், இஸ்லாமியா மேல்நிலை பள்ளி பின்புறம், தெற்கு தெரு, கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்.

தொடர்பிற்கு :  9500948429

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ இராமநாதபுரம் மாவட்ட  மாணவர் அணி
  
3. அம்மாபட்டிணம் (புதுகோட்டை மாவட்டம்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : காலை 9 : 30 மணி

இடம் : அரசு பெண்கள் மேல் நிலை பள்ளி, அம்மா பட்டிணம், புதுகோட்டை மாவட்டம்

சிறப்புரை : சகோ. N.அல் அமீன் B.E (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)
                

தொடர்பிற்கு : 9043486280

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புதுகோட்டை மாவட்ட மாணவர் அணி.
 
4. T.R.பட்டிணம் (காரைகால்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : மாலை 4 மணி

இடம் :  TNTJ மர்கஸ், N0: 7, ஹாஜியார் தெரு, TR.பட்டிணம், காரைகால்

சிறப்புரை : சகோ.கலீல்.M.B.A. (மண்டல மாணவர் அணி செயலாளர்)
                
 தொடர்பிற்கு : 9976615655

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ காரைகால் மாவட்ட மாணவர் அணி.
 
5.  திருத்துறைபூண்டி (திருவாரூர் மாவட்டம்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : காலை 10 மணி

இடம் :  TNTJ மர்கஸ், பொன்னையன் செட்டி தெரு, திருத்துறைபூண்டி, திருவாரூர் மாவட்டம்

சிறப்புரை : சகோ.ஹாஜி.B.E. (மண்டல மாணவர் அணி துனை செயலாளர்)
                

தொடர்பிற்கு : 9715188464

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.
 
 
6. ஆர்.புது பட்டிணம் (புதுகோட்டை மாவட்டம்)

நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010)

நேரம் : மாலை 4 மணி

இடம் :  No : 6/194, முஸ்லீம் தெரு, ஆர்.பட்டினம், புதுகோட்டை மாவட்டம்

சிறப்புரை : சகோ. N.அல் அமீன் B.E (மாநில மாணவர் அணித் துணைச் செயலாளர்)
                
தொடர்பிற்கு : 9043486280

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புதுகோட்டை மாவட்ட  மாணவர் அணி.
 
 7. திருவாரூரில்   

நாள் :  சனி கிழமை  (16/01/2010)

நேரம் : காலை 10 மணி

இடம் :  மஸ்ஜித் தக்வா, செல்வம் தெரு, திருவாரூர், திருவாரூர் மாவட்டம்

சிறப்புரை : மருத்துவர்.சர்வத்கான்.M.B.B.S
                  சகோ.ஹாஜி.B.E. (மண்டல மாணவர் அணி துனை செயலாளர்)
                
 தொடர்பிற்கு : 9865962542

  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.
   
 சிவகங்கை மாவட்ட மாணவர் அணி நடத்தும் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா)
 
நாள் :  ஞாயிற்று கிழமை  (17/01/2010) (இன்ஷா அல்லாஹ்)

நேரம் : காலை 10 மணி

இடம் :  TNTJ மர்கஸ், சிவகங்கை புது பேருந்து நிலையம் அருகில், பெட்ரோல் பஃங்க் பின்புறம், சிவகங்கை
    
தொடர்பிற்கு : 9003811959

 மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ சிவகங்கை மாவட்ட மாணவர் அணி.
 
 






12.1.10

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

நாமும் கலெக்டராவோம் (IAS) கமிஷ்னராவோம் (IPS)
- வெரும் 70 ரூபாய் செலவில் தயாராகுங்கள் பட்டதாரிகளே !!!








இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான நுழைவு தேர்வு (IAS, IPS, IFS etc…) விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முதல் நிலை தேர்விற்க்கான விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுவிலும் தேர்சி பெற்று நேர்முக தேர்வுவில் தேர்வு பெற்றால் 24 உயர் பதவியியில் ஒன்றை பெறலாம். இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசு பதவிக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த தேர்வை எழுதி வெற்றி பெருவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும் (கலெக்டர்), காவல் துறை ஆணையராகவும் (கமிஷ்னர்) முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான், பெண்களுக்கு ரூ.20 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும், குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாதது (அல்லது மிக குறைவாக இருப்பது) மிக முக்கிய காரணங்களில் . சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் நாம் IPS, IAS -இல் தேர்வாகி காவல் துறை ஆனையாளராகவும், மாவட்ட கலெக்டராகவும் ஆனால் மட்டுமே நமது சமுதாயத்திற்க்கு பதுகாப்பு அளிக்க முடியும். சமுதாய முன்னேறத்திற்க்கும் பாதுகாப்பிற்க்கும் அரசியல் தீர்வல்ல, படித்து இது போன்ற பதிவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். அரசியல் மாயை காட்டி உங்களின் உழைப்பில் பதவி சுகம், பணம் அடையதுடிப்பவர்களை தூக்கி எறியுங்கள், நேரத்தை வீணாக்காமல் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.
இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பாட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வருங்கள் என உங்களை மாணவர் அணி அன்புடன் அழைகின்றது.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்க்கு மற்றும் ஓர் காரணம் , இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் (ன்று தங்களை சொல்லிகொள்பவர்கள்). இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய பட்டதாரிகளின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC ( IAS,IPS,IFS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுறித்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.


தங்கள் பிள்ளைகளை இலச்ச கணக்கில் பணத்தை கட்டி படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் 70 ரூபாயில் எழுதப்படும் இந்த தேர்வை எழுத தங்கள் பிள்ளைகளை தூண்டுவதில்லை. இதில் நாம் பெற்றோர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பொதுவாகவே நமது சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிவதில்லை, மேலும் வழிகாட்ட யாரும் முன் வருவதில்லை, அல்லது அவர்களின் வழிகாட்டல் மிக குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே உள்ளது (இப்போது உங்களுக்கு வழிகாட்ட நமது மாணவர் அணி தயாராக உள்ளது). இது வரை முஸ்லீம் இயக்கங்களை நடத்திய தலைவர்கள் இதில் அக்கரை காட்டாமல் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் அரசியலை பிடித்துக்கொண்டு முஸ்லீம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அரசியலைவிட கல்வி முன்னேற்றம் தான் ஒரு சமூகத்திற்க்கு பாதுகாப்பையும், சுகாதாரத்தையும், சுய சிந்தனையும் கொடுக்கும். அரசியல்வதிகள் ஐந்து வருததில் மாறிவிடுவார்கள் ஆனால் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) போன்றவர்கள் பல வருடங்கள் பணியாற்றி சமுதாயத்திற்க்கு பாதுகாப்பும் முன்னேற்றமும் வழங்க முடியும். எனவே தான் நமது மாணவர் அணி கல்வி முன்னேற்றத்தை கையில் எடுத்து இதுவரை யாரும் செய்திராத கல்வி வளர்ச்சி பணியை தமிழகத்தின் மூளை முடுக்கெள்ளாம் செய்து வருகின்றது.


IAS, IPS நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம். நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு UPSC தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.





ஆக்கம் :
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி








7.1.10

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாணவிக‌ள் க‌வ‌ன‌த்திற்கு

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாணவிக‌ள் க‌வ‌ன‌த்திற்கு

அல்ஹாஜ் டாக்ட‌ர் ஏ. ஜ‌மீர் பாஷா ‍ ஹாஜியா ஷ‌கீலா த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் டாக்ட‌ர் எம்.எஸ். அஷ்ர‌ஃப் ஹாஜியா ஜீன‌த் த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் ஹெச். க்யூ. ந‌ஜ்முதீன் ஹாஜியா சைய‌து பாத்திமா த‌ம்ப‌திக‌ள்
அல்ஹாஜ் ஏ. ப‌ஷீர் அஹ்ம‌த் ஹாஜியா அப்ரோஜா க‌னி த‌ம்ப‌திக‌ள்

வ‌ழ‌மை போல் இவ்வ‌ருட‌மும் எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் தேர்வில் அதிக‌ ம‌திப்பெண்க‌ள் பெற்ற‌ முஸ்லிம் மாண‌விக‌ளுக்கு ந‌ர்கிஸ் சார்பில் ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கி பாராட்ட‌ இருக்கிறார்க‌ள்.

அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து ம‌திப்பெண் சான்றித‌ழ்க‌ளை ஜுன் 30 க்குள் கைப்ப‌ட‌ எழுதிய‌ க‌டித‌ம், வீட்டு முக‌வ‌ரி, தொலைபேசி எண், 1 புகைப்ப‌ட‌ம், ரிப்ளை க‌வ‌ர் இணைத்து ந‌ர்கிஸ் முக‌வ‌ரிக்கு அனுப்பித் த‌ர‌ வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி, பிள‌ஸ் டூ, ப‌த்தாம் வ‌குப்பு ம‌ற்றும் மெட்ரிகுலேஷ‌ன் மாண‌விக‌ள் என்று க‌வ‌ரில் குறிப்பிட‌வும்.

முக‌வ‌ரி :

எம். அனீஸ் ஃபாத்திமா
ஆசிரியை, ந‌ர்கிஸ்
54 ம‌ரிய‌ம் ந‌க‌ர்
ம‌ல்லிகைபுர‌ம்
திருச்சி 620 001
--------------------------------

இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் - துபாய்