31.5.10

தமிழகத்தில் 2 லட்சம் பி.இ. விண்ணப்பங்கள் விற்பனை



சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 1,72,445 பொறியியல் இடங்களில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.

இதில் நேற்று வரை 1 லட்சத்துக்கும் அதிகமான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க நாளையே (மே 31) கடைசி தினமாகும்.

பி.இ. படிப்பில் சேர மாணவர்கள் அனுப்பிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து விட்டதா என்பதை www.ann​auniv.edu இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பி.இ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் வரும் ஜூன் 18ம் தேதி வெளியிடப்படும். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.

                                                                 நன்றி-THASTAMIL

0 comments: